India
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியர் யார் தெரியுமா?
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை அதிக வருமானம் ஈட்டும் 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஒரே இந்தியராக இந்திய அணி கேப்டன் கோலி இடம்பெற்றுள்ளார். இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளோரில் ஒரே இந்தியரும், ஒரே கிரிக்கெட் வீரரும் கோலி மட்டுமே.
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் 100-வது இடத்தைப் பிடித்துள்ளார் கோலி. விளம்பரங்கள் மூலமாக 21 மில்லியன் டாலரும், சம்பளமாக 4 மில்லியன் டாலரும் சேர்த்து விராட் கோலி, ஆண்டுக்கு 25 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் அதிக வருமானம் ஈட்டுவோரில் முதல் மூன்று இடங்களையும் கால்பந்து வீரர்களே பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதிகம் வருமானம் ஈட்டும் வீரராக அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி உள்ளார். அவர் 127 மில்லியன் டாலரை வருமானமாக ஈட்டுகிறார்.
இரண்டாம் இடத்தில் போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோவும், மூன்றாவது இடத்தில் பிரேசில் கால்பந்து வீரர் நெய்மாரும் உள்ளனர். இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் செரினா வில்லியம்ஸ் மட்டுமே. அவர் இந்தப் பட்டியலில் 63-வது இடத்தைப் பெற்றுள்ளார்.
Also Read
-
“கழக அரசு மீது களங்கம் ஏற்படுத்த நினைத்தால் அதனைப் பெண்களே ஏற்க மாட்டார்கள்!” : முரசொலி தலையங்கம்!
-
“இஸ்லாமியர்களின் உரிமைக்காக முதல் ஆளாக குரல் கொடுப்பது தி.மு.க. தான்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று வாக்குப்பதிவு! : இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
-
NDA-க்கு எதிராக முழங்கிய தமிழ்நாடு! : மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! : தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!