India
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியர் யார் தெரியுமா?
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை அதிக வருமானம் ஈட்டும் 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஒரே இந்தியராக இந்திய அணி கேப்டன் கோலி இடம்பெற்றுள்ளார். இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளோரில் ஒரே இந்தியரும், ஒரே கிரிக்கெட் வீரரும் கோலி மட்டுமே.
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் 100-வது இடத்தைப் பிடித்துள்ளார் கோலி. விளம்பரங்கள் மூலமாக 21 மில்லியன் டாலரும், சம்பளமாக 4 மில்லியன் டாலரும் சேர்த்து விராட் கோலி, ஆண்டுக்கு 25 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் அதிக வருமானம் ஈட்டுவோரில் முதல் மூன்று இடங்களையும் கால்பந்து வீரர்களே பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதிகம் வருமானம் ஈட்டும் வீரராக அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி உள்ளார். அவர் 127 மில்லியன் டாலரை வருமானமாக ஈட்டுகிறார்.
இரண்டாம் இடத்தில் போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோவும், மூன்றாவது இடத்தில் பிரேசில் கால்பந்து வீரர் நெய்மாரும் உள்ளனர். இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் செரினா வில்லியம்ஸ் மட்டுமே. அவர் இந்தப் பட்டியலில் 63-வது இடத்தைப் பெற்றுள்ளார்.
Also Read
-
சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - காரணம் என்ன ?
-
தமிழ்நாட்டுக்கு பாராமுகம் காட்டினால்,தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- தினகரன் தலையங்கம் எச்சரிக்கை!
-
முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!