India
மே. வங்கத்தில் பா.ஜ.க மற்றும் திரிணாமுல் கட்சியினர் கலவரம்: மோதலில் 4 பேர் பலி!
மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் அதிக இடங்களை வென்று 2வது இடத்தை பிடித்துள்ளது. பாஜக தேர்தல் பேரணியிலிருந்து நேற்றைய தினம் வெற்றிக்கொண்டாட்ட பேரணி முதல் தொடர்ந்து வன்முறையை நிகழ்த்தி வருகின்றனர்.
நேற்றையதினம் 24 பர்கானாஸ் மாவட்டம் கந்தேஷ்கலி என்ற இடத்தில் பா.ஜ.க சார்பில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் மற்றும் பதாகைகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அகற்றியதாக கூறப்படுகின்றது. இதனால் நேற்று இரவு இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இருவருக்கும் முற்றிய இந்திரா மோதலில் பா.ஜ.க கட்சியின் தொண்டர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சயந்தன் பாசுவும் கூறியுள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டரை பா.ஜ.கவினர் கத்தியால் குத்தி கொன்றதாக அந்த மாநில அமைச்சர் ஜோதிபிரியோ முல்லிக் தெரிவித்தார்.
இந்த வன்முறை சம்பவத்தால் மேற்கு வங்க மாநிலத்தில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் அச்சத்துடன் வாழுகின்ற சூழல் உருவாகியுள்ளது.
Also Read
-
பக்காவாக முடிந்த தேர்தல் அறிக்கை பணி.. அடுத்த டார்கெட்.. பிரச்சாரத்தை தொடங்கும் கனிமொழி எம்.பி…!
-
பா.ஜ.க-வையும் அ.தி.மு.க-வையும் விரட்டியடிப்போம் : காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் எதற்கு? - கலைஞரை வைத்து விளக்கம் கொடுத்த கனிமொழி எம்.பி.! - விவரம்!
-
மாவட்டம்தோறும் ‘செஸ் பயிற்சி மையங்கள்' : விளையாட்டு துறைக்கு 19 தேர்தல் வாக்குறுதி கொடுத்த தி.மு.க!
-
திருநர் - திருநங்கையர் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் தி.மு.க : 3 முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!