India
“உ.பி. இடைத்தேர்தலில் சமாஜ்வாதியும் தனித்து போட்டியிடும்” : அகிலேஷ் யாதவ்
மக்களவைத் தேர்தலில் எதிர்ப்பார்த்த வெற்றியை எட்ட முடியாததால், உத்தர பிரதேச மாநிலத்தில் கூட்டணி வைத்து போட்டியிட்ட பகுஜன் சமாஜும், சமாஜ்வாதியும் தற்போது சிதறியுள்ளது.
பல ஆண்டுகளாக பரஸ்பர குற்றச்சாட்டுகளை வைத்திருந்த பகுஜன் சமாஜும், சமாஜ்வாதி கட்சியும் நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டது. உத்தரபிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி 38, 37 தொகுதிகள் முறையே பிரித்து தேர்தலில் களம் கண்டது.
ஆனால் இவ்விரு கட்சிகளும் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. மாயாவதியின் பி.எஸ்.பி. 10 தொகுதிகளிலும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி 5 தொகுதிகளிலுமே வெற்றி பெற்றுள்ளது.
இதனால், ஆழ்ந்த அதிருப்தியில் இருந்த மாயாவதி, அகிலேஷ் கட்சியுடனான கூட்டணியில் இருந்து பிரிந்தார்.
அது மட்டுமில்லாமல் லோக்சபா தேர்தலில் தோல்வியுற்றதற்கு அகிலேஷ் யாதவ் தான் காரணம் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், உத்தர பிரதேசத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தனித்தே போட்டியிடப்போவதாகவும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, கூட்டணி இல்லையென்றாலும் பரவாயில்லை. சட்டமன்ற இடைத்தேர்தலில் சமாஜ்வாதியும் தனித்தே போட்டியிடும். மேலும், மாயாவதியின் பேச்சு மற்றும் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.
Also Read
-
பா.ஜ.க.வின் பெயரைப் பயன்படுத்த த.வெ.க அச்சப்படுவது ஏன்? - தொடரும் கள்ள மெளனம்!
-
மாணவர்களுக்கு இருக்கும் துணிச்சல்கூட இந்த 'டம்மி' முதல்வருக்கு இல்லை என்பது வெட்கக்கேடு : திமுக ஐடி விங்!
-
தூத்துக்குடி முத்துக்களுக்கான புவிசார் குறியீடு எப்போது? : கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!
-
டெல்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மாணவர் அமைப்பினர் கைது! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!
-
நீட் தேர்வின் ஆபத்தை முதன்முதலில் எச்சரித்தது தி.மு.க.தான் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!