India
புதிய அமைச்சரவையில் எனக்கு பதவி வேண்டாம்: மோடிக்கு அருண் ஜெட்லி கடிதம்!
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, பாஜக கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கவுள்ளது. ஆதலால், மோடியே மீண்டும் பிரதமராக உள்ளார்.
இதனையடுத்து, நாளை மாலை 7 மணிக்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் புதிய அமைச்சரவைக்கான பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
இந்த நிலையில், நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை குறைவு காரணமாக பொது நிகழ்ச்சி மற்றும் அரசு நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்தார்.
எனவே, உடல்நலத்தை கவனிக்க வேண்டும் என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதால், நாளை அமையவுள்ள புதிய அமைச்சரவையில் தனக்கு எந்த இடமும் வழங்க வேண்டாம் என மோடிக்கு அருண் ஜெட்லி கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து ஏற்கெனவே, வாய்மொழியாக மோடியிடம் தெரிவித்திருந்ததாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!