India
புதிய அமைச்சரவையில் எனக்கு பதவி வேண்டாம்: மோடிக்கு அருண் ஜெட்லி கடிதம்!
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, பாஜக கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கவுள்ளது. ஆதலால், மோடியே மீண்டும் பிரதமராக உள்ளார்.
இதனையடுத்து, நாளை மாலை 7 மணிக்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் புதிய அமைச்சரவைக்கான பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
இந்த நிலையில், நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை குறைவு காரணமாக பொது நிகழ்ச்சி மற்றும் அரசு நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்தார்.
எனவே, உடல்நலத்தை கவனிக்க வேண்டும் என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதால், நாளை அமையவுள்ள புதிய அமைச்சரவையில் தனக்கு எந்த இடமும் வழங்க வேண்டாம் என மோடிக்கு அருண் ஜெட்லி கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து ஏற்கெனவே, வாய்மொழியாக மோடியிடம் தெரிவித்திருந்ததாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!