India
ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவு தற்கொலைக்கு நிகரானது - லாலு பிரசாத் யாதவ் !
நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் தி.மு.க.,வுடனான கூட்டணியிலும், கேரளாவிலும் அதிகளவிலான வெற்றியை பெற்றுள்ளது.
வட இந்தியாவில் காங்கிரஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாலும், தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்காததற்கு பொறுப்பேற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்வதாக தகவல் வெளியானது. அதற்கு காங்கிரஸ் காரிய கமிட்டி மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் இது குறித்து தெரிவிக்கையில், காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக இருந்தால் அது தற்கொலை செய்வதற்கு சமம் என கூறியுள்ளார்.
ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் அது காங்கிரஸுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்குமான தற்கொலை முடிவாகவே அமையும் என்று தெரிவித்துள்ளார். மதவாத, பாசிச சக்தியாக உள்ள பாஜகவை வேறோடு அழிக்க வேண்டும் என்பதே அனைத்து எதிர்க்கட்சிகளின் குறிக்கோளாக இருந்தன. ஆனால், நடந்து முடிந்த தேர்தலில், அதனை தேசிய அளவில் எழுப்ப முடியாமல் போய்விட்டது.
மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பில், காந்தி நேரு குடும்பத்தினரை தவிர்த்து வேறு எவரேனும் பதவி வகித்தால், கடும் விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும். அதுமட்டுமில்லாமல் பொம்மை தலைவரை கொண்டுள்ள கட்சி என பாஜகவினர் சாடத் தொடங்குவர்.
எனவே, இது போன்ற விஷமிகளுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நலம் என கருத்துத் தெரிவித்துள்ளார் லாலு பிரசாத் யாதவ்.
Also Read
-
“தமிழ்நாட்டின் நிதிப் பொறுப்பும் பட்ஜெட் மேலாண்மையும் கட்டமைப்பிற்குள் உள்ளது” : இந்து நாளேடு பாராட்டு!
-
தஞ்சையில் அடுத்த மகளிர் அணி மாநாடு! - தயாராகும் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” : முழு விவரம் உள்ளே!
-
“மதவாத அரசியல் போதையை தடுத்திட நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும்!” : திருச்சியில் முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு 21 லட்சம் வாகனங்கள் பதிவு : கடந்த ஆண்டை விட 8.4% வாகனங்கள் விற்பனை!
-
2025 ஆம் ஆண்டில் 2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!