India
தபோல்கர் கொலை வழக்கில் இந்துத்வ பயங்கரவாதிகள் கைது!
புனேவைச் சேர்ந்த மருத்துவரும், எழுத்தாளருமான நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் தொடர்புடைய சஞ்சீவ் புனலேகர் மற்றும் விக்ரம் பவே ஆகியோரைக் கைது செய்துள்ளது சிபிஐ.
முற்போக்குவாதி நரேந்தர் தபோல்கர் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புனேவில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது இந்துத்வ பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ புனலேகர் மற்றும் விக்ரம் பவே ஆகியோரைக் கைது செய்துள்ளது.
சஞ்சீவ் புனலேகர் வலதுசாரி அமைப்பான சனாதன் சன்ஸ்தாவின் ஆலோசகராகச் செயல்பட்டு வருகிறார். இவர் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவரும், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போபால் தொகுதியில் நின்று வென்றவருமான பிரக்யா சிங் தாக்கூருக்காக வாதாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட விக்ரம் பவே, சனாதான் சன்ஸ்தா உறுப்பினர் ஆவார். இவரும் பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர். தபோல்கர் கொலை வழக்கில் ஏற்கெனவே சனாதான் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த விரேந்திர சிங் தவாடே சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!
-
ஒன்றிய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: இரகுமான் கான் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் சூளுரை!