India
தபோல்கர் கொலை வழக்கில் இந்துத்வ பயங்கரவாதிகள் கைது!
புனேவைச் சேர்ந்த மருத்துவரும், எழுத்தாளருமான நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் தொடர்புடைய சஞ்சீவ் புனலேகர் மற்றும் விக்ரம் பவே ஆகியோரைக் கைது செய்துள்ளது சிபிஐ.
முற்போக்குவாதி நரேந்தர் தபோல்கர் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புனேவில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது இந்துத்வ பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ புனலேகர் மற்றும் விக்ரம் பவே ஆகியோரைக் கைது செய்துள்ளது.
சஞ்சீவ் புனலேகர் வலதுசாரி அமைப்பான சனாதன் சன்ஸ்தாவின் ஆலோசகராகச் செயல்பட்டு வருகிறார். இவர் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவரும், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போபால் தொகுதியில் நின்று வென்றவருமான பிரக்யா சிங் தாக்கூருக்காக வாதாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட விக்ரம் பவே, சனாதான் சன்ஸ்தா உறுப்பினர் ஆவார். இவரும் பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர். தபோல்கர் கொலை வழக்கில் ஏற்கெனவே சனாதான் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த விரேந்திர சிங் தவாடே சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
SIR : “அதிமுக - பாஜக களத்துக்கு வராதபோதுதான் சந்தேகமாக இருக்கிறது...“ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!