India
தபோல்கர் கொலை வழக்கில் இந்துத்வ பயங்கரவாதிகள் கைது!
புனேவைச் சேர்ந்த மருத்துவரும், எழுத்தாளருமான நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் தொடர்புடைய சஞ்சீவ் புனலேகர் மற்றும் விக்ரம் பவே ஆகியோரைக் கைது செய்துள்ளது சிபிஐ.
முற்போக்குவாதி நரேந்தர் தபோல்கர் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புனேவில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது இந்துத்வ பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ புனலேகர் மற்றும் விக்ரம் பவே ஆகியோரைக் கைது செய்துள்ளது.
சஞ்சீவ் புனலேகர் வலதுசாரி அமைப்பான சனாதன் சன்ஸ்தாவின் ஆலோசகராகச் செயல்பட்டு வருகிறார். இவர் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவரும், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போபால் தொகுதியில் நின்று வென்றவருமான பிரக்யா சிங் தாக்கூருக்காக வாதாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட விக்ரம் பவே, சனாதான் சன்ஸ்தா உறுப்பினர் ஆவார். இவரும் பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர். தபோல்கர் கொலை வழக்கில் ஏற்கெனவே சனாதான் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த விரேந்திர சிங் தவாடே சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!