India
மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனான சுனில் அரோராவின் ஆலோசனை ரத்து!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான 7 கட்ட வாக்குப்பதிவு மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் மே 19ம் தேதியோடு நடந்து முடிந்தன.
இதனையடுத்து, நாளை நாடுமுழுவதும் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெற இருக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து, தமிழகம் உள்ளிட்ட 10 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்த இருந்தார்.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை குறித்து 10 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் சுனில் அரோரா நடந்த இருந்த ஆலோசனைக் கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
Also Read
-
தி.மு.க வெள்ளை அறிக்கை vs த.வெ.க வெள்ளை அறிக்கை : தி.மு.க IT WING விளக்கம்!
-
“முதலமைச்சர் விஜயிடம் நான் கேட்பது இதுதான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
-
“ஒன்றிய அரசின் அலட்சியம்.. கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை.. தொடரும் நீட் தேர்வு மரணம்”
-
“ஆழம் தெரியாமல் காலை விட்ட தவெக, முடியாததால் வெள்ளை அறிக்கை தருகிறதா?” : தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி!
-
“மரண ஓலம் விஜய் காதில் விழவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!