India
மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனான சுனில் அரோராவின் ஆலோசனை ரத்து!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான 7 கட்ட வாக்குப்பதிவு மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் மே 19ம் தேதியோடு நடந்து முடிந்தன.
இதனையடுத்து, நாளை நாடுமுழுவதும் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெற இருக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து, தமிழகம் உள்ளிட்ட 10 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்த இருந்தார்.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை குறித்து 10 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் சுனில் அரோரா நடந்த இருந்த ஆலோசனைக் கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!