India
மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனான சுனில் அரோராவின் ஆலோசனை ரத்து!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான 7 கட்ட வாக்குப்பதிவு மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் மே 19ம் தேதியோடு நடந்து முடிந்தன.
இதனையடுத்து, நாளை நாடுமுழுவதும் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெற இருக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து, தமிழகம் உள்ளிட்ட 10 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்த இருந்தார்.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை குறித்து 10 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் சுனில் அரோரா நடந்த இருந்த ஆலோசனைக் கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
Also Read
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !
-
”பிரதமர் மோடி பேசியது அபாண்டமானது; பேசக்கூடாதது” : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !
-
”ஓராண்டில் 15,500 பேர் மலையேற்றம்” : சுற்றுலாத்துறையில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு!
-
கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?