India
“பா.ஜ.க இன்றே கொண்டாடிக் கொள்ளட்டும்.. நாளை விடை கிடைத்துவிடும்” : சசிதரூர் விமர்சனம்!
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது.
இந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க-வுக்கே வெற்றி கிடைக்கும் என பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் கணித்திருக்கிறது. இதனையடுத்து, பா.ஜ.க-வினர் பல்வேறு பகுதிகளில் கொண்டாடி வருகின்றனர்.
இது குறித்து காங்கிரஸ் எம்.பி. சசிதரூரிடம் கேள்வி எழுப்பியபோது,
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை நான் நம்பமாட்டேன். பாஜகவினர் எப்படி வேண்டுமானாலும் கொண்டாடட்டும். ஆனால் மக்களின் தீர்ப்புதான் இறுதியானது. நமக்கு நாளை மாலைக்குள் விடை கிடைத்துவிடும் என்று கூறியுள்ளார்.
முந்தைய காலகட்டங்களில் வெளிவந்த கருத்துக்கணிப்புகள் அனைத்து பொய்யாகவே இருந்துள்ளன. 2004-ம் ஆண்டு வந்த கணிப்பினால் பா.ஜ.க என்ன ஆனது என்பது ஊரறிந்த ஒன்று. அது (பா.ஜ.க) ஒரு மூழ்கும் கப்பல். ஆகையால், மூழ்கப்போகும் கப்பல் என்ன செய்தால் என்ன என்று விமர்சித்துள்ளார் சசிதரூர்.
Also Read
-
”பா.ஜ.கவின் இந்துத்வா கொள்கை வீட்டையே தீ வைத்து எரித்து விடும்” : உத்தவ் தாக்கரே கடும் சாடல்!
-
கெஜரிவால் நன்மதிப்பைச் சீர்குலைக்க - பிணம் தின்னும் வட இந்திய ஊடக தர்மங்கள் : சிலந்தி!
-
“துரித உணவுகளால் புற்றுநோய்க்கு வாய்ப்பு”: உணவுப் பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த மருத்துவர்கள்! Special news
-
”அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ.கவால் தொடக்கூட முடியாது" : ரேபரேலியில் ராகுல் காந்தி அனல் பேச்சு!
-
விடியல் பயண திட்டம் - பெண்களின் முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சும் மோடி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!