India
தேர்தல் எக்ஸிட் போல்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி!
மக்களவைத் தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலான தேசிய ஊடகங்கள் பாஜகவுக்கு சாதகமாகவே கணித்திருக்கின்றன.
இதற்கு பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சியினர் என அனைத்து தரப்பில் இருந்தும் எதிர்ப்பும், பதிலடியுமே வந்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் இந்த கருத்துக்கணிப்புகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 2004ம் ஆண்டும் இதேபோல், பாஜகதான் வெல்லும் என கணிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் நடந்தது வேறு. எனவே, மக்களின் கணிப்புகளுக்கான முடிவுகள் மே 23ல் வெளிவரும்.
மேலும், சபரிமலை விவகாரத்துக்கும் தேர்தலுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. அதன் பின்னணியில் யார் எல்லாம் பிரச்னை செய்தனர் என்பது அனைவருக்கும் தெரியும் என மறைமுகமாக பா.ஜ.க.வை சாடியுள்ளார்.
Also Read
-
“இஸ்லாமியர்களின் உரிமைக்காக முதல் ஆளாக குரல் கொடுப்பது தி.மு.க. தான்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று வாக்குப்பதிவு! : இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
-
NDA-க்கு எதிராக முழங்கிய தமிழ்நாடு! : மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! : தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!
-
“மக்களுக்காக மேலும் உழைக்க காத்திருக்கிறோம்!” : திருப்பத்தூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!