India
“கோட்சே ஒரு தேசபக்தர்” எனக் கூறிய விவகாரம் : அறிக்கை கோரும் தேர்தல் ஆணையம்!
நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று பா.ஜ.க வேட்பாளர் பிரக்யா சிங் கூறியது குறித்து மத்திய பிரதேச தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்று மக்களவைத் தேர்தலில் மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
பிரக்யா சிங் தாக்கூர் பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மாட்டின் சிறுநீரைப் பயன்படுத்தியதால் தன தனக்கிருந்த புற்றுநோய் குணமானது எனத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரே பிரக்யாவுக்கு அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டதை வெளிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பதால், இந்திய தேர்தல் ஆணையம் மத்திய பிரதேச தலைமை தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கோரியுள்ளது.
Also Read
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
தீபாவளி பண்டிகை : சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் - கிளாம்பாக்கத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்!
-
இதற்கெல்லாம் பதில் வருமா? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கேள்வி எழுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தீபாவளிக்கு அடுத்தநாள் பொதுவிடுமுறையா? : தமிழ்நாடு அரசின் அறிவிப்பு என்ன?
-
முதலமைச்சரின் தீர்மானம் - “இதெல்லாம் ஆர்.என்.ரவிக்கு உறைக்குமா ?” :ஆளுநரை வெளுத்து வாங்கிய ‘முரசொலி’ !