India
அமித்ஷா பேரணியில் வன்முறை : பா.ஜ.க குண்டர்களால் தூண்டப்பட்டதாக மம்தா கருத்து!
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நேற்று மாலை பா.ஜ.க தலைவர் அமித்ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் வன்முறை வெடித்தது. இது பா.ஜ.க-வினர் அழைத்து வந்த குண்டர்களால் ஏற்பட்ட வன்முறை எனத் தெரிவித்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
அமித்ஷா பங்கேற்ற பேரணி நேற்று மாலை மத்திய கொல்கத்தாவின் எஸ்ப்ளனேட் பகுதியில் தொடங்கியது. கொல்கத்தா பல்கலைக்கழக மாணவர்கள் 'கோபேக் அமித்ஷா' என பதாகை ஏந்தியதோடு பா.ஜ.க-விற்கு எதிராக கோஷம் எழுப்பியுள்ளனர்.
இதனால், பா.ஜ.க ஆதரவாளர்கள் இரும்பு கம்பிகள் கொண்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். போலீசார் தடியடி நடத்தி இருதரப்பினரையும் கலைத்துள்ளனர். வன்முறை நடந்த இடங்களில் எடுக்கப்பட்ட வீடியோக்களில் காவி உடை அணிந்த சிலர் கற்களை வீசுவது போல் பதிவாகியுள்ளது.
“பா.ஜ.க-வினர் மேற்குவங்கத்திற்கு வெளியில் இருந்து அழைத்து வந்த குண்டர்களால் இந்த வன்முறை சம்பவம் தூண்டப்பட்டுள்ளது. பா.ஜ.க இன்று செய்ததை மேற்குவங்கம் ஒருபோதும் மறக்காது” என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!