India
அமித்ஷா பேரணியில் வன்முறை : பா.ஜ.க குண்டர்களால் தூண்டப்பட்டதாக மம்தா கருத்து!
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நேற்று மாலை பா.ஜ.க தலைவர் அமித்ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் வன்முறை வெடித்தது. இது பா.ஜ.க-வினர் அழைத்து வந்த குண்டர்களால் ஏற்பட்ட வன்முறை எனத் தெரிவித்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
அமித்ஷா பங்கேற்ற பேரணி நேற்று மாலை மத்திய கொல்கத்தாவின் எஸ்ப்ளனேட் பகுதியில் தொடங்கியது. கொல்கத்தா பல்கலைக்கழக மாணவர்கள் 'கோபேக் அமித்ஷா' என பதாகை ஏந்தியதோடு பா.ஜ.க-விற்கு எதிராக கோஷம் எழுப்பியுள்ளனர்.
இதனால், பா.ஜ.க ஆதரவாளர்கள் இரும்பு கம்பிகள் கொண்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். போலீசார் தடியடி நடத்தி இருதரப்பினரையும் கலைத்துள்ளனர். வன்முறை நடந்த இடங்களில் எடுக்கப்பட்ட வீடியோக்களில் காவி உடை அணிந்த சிலர் கற்களை வீசுவது போல் பதிவாகியுள்ளது.
“பா.ஜ.க-வினர் மேற்குவங்கத்திற்கு வெளியில் இருந்து அழைத்து வந்த குண்டர்களால் இந்த வன்முறை சம்பவம் தூண்டப்பட்டுள்ளது. பா.ஜ.க இன்று செய்ததை மேற்குவங்கம் ஒருபோதும் மறக்காது” என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Also Read
-
நேர்மையுடன் செயல்பட்ட தூய்மைப் பணியாளர் : நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அயலகத் தமிழர்களுக்கு விருதுகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
“இந்தித் திணிப்பைத் தமிழ்நாடு என்றைக்கும் எதிர்க்கும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!
-
இந்தி தான் தேசிய மொழியா? - நடு மைதானத்தில் நடந்த காரசார விவாதம்... வர்ணனையாளர்களால் வெடித்த சர்ச்சை!
-
“இந்தியாவிற்கு நம்பிக்கை கொடுத்த சென்னை மாநகராட்சி” : தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டு!