India
அமித்ஷா பேரணியில் வன்முறை : பா.ஜ.க குண்டர்களால் தூண்டப்பட்டதாக மம்தா கருத்து!
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நேற்று மாலை பா.ஜ.க தலைவர் அமித்ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் வன்முறை வெடித்தது. இது பா.ஜ.க-வினர் அழைத்து வந்த குண்டர்களால் ஏற்பட்ட வன்முறை எனத் தெரிவித்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
அமித்ஷா பங்கேற்ற பேரணி நேற்று மாலை மத்திய கொல்கத்தாவின் எஸ்ப்ளனேட் பகுதியில் தொடங்கியது. கொல்கத்தா பல்கலைக்கழக மாணவர்கள் 'கோபேக் அமித்ஷா' என பதாகை ஏந்தியதோடு பா.ஜ.க-விற்கு எதிராக கோஷம் எழுப்பியுள்ளனர்.
இதனால், பா.ஜ.க ஆதரவாளர்கள் இரும்பு கம்பிகள் கொண்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். போலீசார் தடியடி நடத்தி இருதரப்பினரையும் கலைத்துள்ளனர். வன்முறை நடந்த இடங்களில் எடுக்கப்பட்ட வீடியோக்களில் காவி உடை அணிந்த சிலர் கற்களை வீசுவது போல் பதிவாகியுள்ளது.
“பா.ஜ.க-வினர் மேற்குவங்கத்திற்கு வெளியில் இருந்து அழைத்து வந்த குண்டர்களால் இந்த வன்முறை சம்பவம் தூண்டப்பட்டுள்ளது. பா.ஜ.க இன்று செய்ததை மேற்குவங்கம் ஒருபோதும் மறக்காது” என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Also Read
-
“குஜராத் மோடியா? இந்த லேடியா?” என்று சவால்விட்டவர் மீது மோடிக்கு திடீர் பாசம்! : முதலமைச்சர் விமர்சனம்!
-
நடிகர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனைவி சங்கீதா! : காரணத்தைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி!
-
கோவை : தந்தை பெரியார் நூலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு - பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு!
-
“குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த இந்தியா… வெளியேறிய ஜிம்பாப்வே அணி… இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்!