India
6-வது கட்ட மக்களவைத் தேர்தல் நிறைவு : 60% வாக்குப்பதிவு!
ஆறாவது கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. 7 மாநிலங்களைச் சேர்ந்த 59 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.
மேற்கு வங்கம், டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
டெல்லி உட்பட இன்று தேர்தல் நடைபெற்ற பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் கண்டறியப்பட்டு தேர்தல் அதிகாரிகளால் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால், பல இடங்களில் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.
59 தொகுதிகளில் இன்று நடைபெற்று முடிந்த தேர்தலில் மாலை 6 மணி வரை சராசரியாக 59.70% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 80% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாநில வாரியாக வாக்குப்பதிவு விவரம் பின்வருமாறு (துல்லியமான விவரம் பின்னர் தெரியவரும்) :
பீகார் - 55.04%
ஹரியானா - 62.14%
மத்திய பிரதேசம் - 60.02%
உத்தர பிரதேசம் - 50.82%
மேற்கு வங்கம் - 80.13%
ஜார்கண்ட் - 64.46%
டெல்லி - 55.44%
Also Read
-
ஜூம்லா விடும் மோடி அரசு : “மக்களை என்றைக்காவது மகிழச் செய்தது உண்டா?” - கி.வீரமணி சரமாரி கேள்வி!
-
“ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே!” : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
“இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்லும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்!” : சரவணன் அண்ணாதுரை விமர்சனம்!
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!