India
6-வது கட்ட மக்களவைத் தேர்தல் நிறைவு : 60% வாக்குப்பதிவு!
ஆறாவது கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. 7 மாநிலங்களைச் சேர்ந்த 59 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.
மேற்கு வங்கம், டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
டெல்லி உட்பட இன்று தேர்தல் நடைபெற்ற பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் கண்டறியப்பட்டு தேர்தல் அதிகாரிகளால் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால், பல இடங்களில் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.
59 தொகுதிகளில் இன்று நடைபெற்று முடிந்த தேர்தலில் மாலை 6 மணி வரை சராசரியாக 59.70% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 80% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாநில வாரியாக வாக்குப்பதிவு விவரம் பின்வருமாறு (துல்லியமான விவரம் பின்னர் தெரியவரும்) :
பீகார் - 55.04%
ஹரியானா - 62.14%
மத்திய பிரதேசம் - 60.02%
உத்தர பிரதேசம் - 50.82%
மேற்கு வங்கம் - 80.13%
ஜார்கண்ட் - 64.46%
டெல்லி - 55.44%
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!