India
பாஜக தலைவரின் பொய் குற்றச்சாட்டு-வீட்டு முன்பு கட்டுக்கட்டாக ஆவணங்களைக் குவித்த காங்கிரஸ்!
மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில் காங்கிரஸ் கட்சி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை எனக் கூறி வருகிறார்.
காங்கிரஸ் மீதான பொய்க் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசும் பா.ஜ.க-வினருக்கு எதிராக ஆதாரங்களை எடுத்து வைத்து பதிலடி கொடுத்துள்ளனர் காங்கிரஸ் கட்சியினர்.
சிவராஜ் சிங் சவுகானின் பேச்சு பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சுரேஷ் பச்சவ்ரி, மாநில அமைச்சர் பி.சி.சர்மா ஆகியோர், கமல்நாத் தலைமையிலான மத்திய பிரதேச அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்த ஆவணங்களை கட்டுக்கட்டாக தூக்கி வந்து சிவராஜ் சிங் சவுகான் வீட்டிற்கு முன்பு குவித்தனர்.
டிசம்பர் 2018-ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது முதல் 21 லட்சம் விவசாயிகளின் வங்கிக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட ஆவணங்களை இரண்டு வாகனங்களில் வைத்து சிவராஜ் சிங் சவுகான் வீட்டுக்கு முன்பு பார்வைக்கு வைத்து பதிலடி கொடுத்துள்ளனர்.
Also Read
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”
-
”இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை.. ஐ.நா.வின் கணிப்பு.. பொய் கூறுகிறாரா பிரதமர்?” - முரசொலி தலையங்கம்!
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!