India
பாஜக தலைவரின் பொய் குற்றச்சாட்டு-வீட்டு முன்பு கட்டுக்கட்டாக ஆவணங்களைக் குவித்த காங்கிரஸ்!
மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில் காங்கிரஸ் கட்சி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை எனக் கூறி வருகிறார்.
காங்கிரஸ் மீதான பொய்க் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசும் பா.ஜ.க-வினருக்கு எதிராக ஆதாரங்களை எடுத்து வைத்து பதிலடி கொடுத்துள்ளனர் காங்கிரஸ் கட்சியினர்.
சிவராஜ் சிங் சவுகானின் பேச்சு பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சுரேஷ் பச்சவ்ரி, மாநில அமைச்சர் பி.சி.சர்மா ஆகியோர், கமல்நாத் தலைமையிலான மத்திய பிரதேச அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்த ஆவணங்களை கட்டுக்கட்டாக தூக்கி வந்து சிவராஜ் சிங் சவுகான் வீட்டிற்கு முன்பு குவித்தனர்.
டிசம்பர் 2018-ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது முதல் 21 லட்சம் விவசாயிகளின் வங்கிக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட ஆவணங்களை இரண்டு வாகனங்களில் வைத்து சிவராஜ் சிங் சவுகான் வீட்டுக்கு முன்பு பார்வைக்கு வைத்து பதிலடி கொடுத்துள்ளனர்.
Also Read
-
கடும் மழை எச்சரிக்கை : திண்டுக்கல் மக்கள் கவனத்திற்கு... அவசர எண் அறிவிப்பு - முழு விவரம்!
-
ஓட்டுக்காக இப்படியா... மோடியின் சமீபகால பொய்கள்... பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்!
-
“இந்து மதத்தை இழிவுப்படுத்திய மோடி...” - நடிகர் கிஷோர் கடும் விமர்சனம் - பின்னணி என்ன?
-
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளவர்கள் கவனத்துக்கு : முக்கிய இடங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் தடை !
-
"பாஜக அலுவலகத்தை முற்றுகைட்டு போராட்டம்" - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு !