India
பாஜக தலைவரின் பொய் குற்றச்சாட்டு-வீட்டு முன்பு கட்டுக்கட்டாக ஆவணங்களைக் குவித்த காங்கிரஸ்!
மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில் காங்கிரஸ் கட்சி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை எனக் கூறி வருகிறார்.
காங்கிரஸ் மீதான பொய்க் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசும் பா.ஜ.க-வினருக்கு எதிராக ஆதாரங்களை எடுத்து வைத்து பதிலடி கொடுத்துள்ளனர் காங்கிரஸ் கட்சியினர்.
சிவராஜ் சிங் சவுகானின் பேச்சு பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சுரேஷ் பச்சவ்ரி, மாநில அமைச்சர் பி.சி.சர்மா ஆகியோர், கமல்நாத் தலைமையிலான மத்திய பிரதேச அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்த ஆவணங்களை கட்டுக்கட்டாக தூக்கி வந்து சிவராஜ் சிங் சவுகான் வீட்டிற்கு முன்பு குவித்தனர்.
டிசம்பர் 2018-ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது முதல் 21 லட்சம் விவசாயிகளின் வங்கிக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட ஆவணங்களை இரண்டு வாகனங்களில் வைத்து சிவராஜ் சிங் சவுகான் வீட்டுக்கு முன்பு பார்வைக்கு வைத்து பதிலடி கொடுத்துள்ளனர்.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!