India
பாஜக தலைவரின் பொய் குற்றச்சாட்டு-வீட்டு முன்பு கட்டுக்கட்டாக ஆவணங்களைக் குவித்த காங்கிரஸ்!
மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில் காங்கிரஸ் கட்சி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை எனக் கூறி வருகிறார்.
காங்கிரஸ் மீதான பொய்க் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசும் பா.ஜ.க-வினருக்கு எதிராக ஆதாரங்களை எடுத்து வைத்து பதிலடி கொடுத்துள்ளனர் காங்கிரஸ் கட்சியினர்.
சிவராஜ் சிங் சவுகானின் பேச்சு பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சுரேஷ் பச்சவ்ரி, மாநில அமைச்சர் பி.சி.சர்மா ஆகியோர், கமல்நாத் தலைமையிலான மத்திய பிரதேச அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்த ஆவணங்களை கட்டுக்கட்டாக தூக்கி வந்து சிவராஜ் சிங் சவுகான் வீட்டிற்கு முன்பு குவித்தனர்.
டிசம்பர் 2018-ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது முதல் 21 லட்சம் விவசாயிகளின் வங்கிக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட ஆவணங்களை இரண்டு வாகனங்களில் வைத்து சிவராஜ் சிங் சவுகான் வீட்டுக்கு முன்பு பார்வைக்கு வைத்து பதிலடி கொடுத்துள்ளனர்.
Also Read
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!
-
இளம் அரசு பணியாளர்கள் : 9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“தமிழ்நாட்டின் எதிர்காலம் இளம் அரசுப் பணியாளர்களிடம் தான் இருக்கிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.5000 பஞ்சாமிர்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு!