India
“மோடியை வீட்டுக்கு அனுப்புவதில் தென்னிந்தியா முக்கியப் பங்காற்றும்” : சசி தரூர்
காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் இன்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர், “மோடி அரசு, தென் மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியது. பா.ஜ.க-வை தோற்கடித்து மோடியை வீட்டுக்கு அனுப்புவதில் தென்னிந்தியா முக்கியப் பங்கு வகிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க-வின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் கூட்டாட்சி முறை மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோடி அரசு தென்னிந்தியாவை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியது. எனவே, இந்த ஆட்சியை அகற்றுவதில் தென்மாநிலங்கள் முக்கியப் பங்கு வகிக்கும்.
மாட்டிறைச்சி விற்பனை செய்யவும், உண்ணவும் தடை விதித்தும், இந்தி மொழியை மாநிலங்கள் மீது திணித்தும் மக்களை அச்சுறுத்தியது பா.ஜ.க அரசு. மேலும் பொருளாதார ரீதியான சறுக்கலையும் சந்திக்கச் செய்தது.
காங்கிரஸ் கட்சி அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து தரப்புக்கும் சம முக்கியத்துவம் தர நினைக்கிறது. அதனால் தான், கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். காங்கிரஸ் ஆட்சியில் தென் மாநிலங்களின் பிரச்சனைகளும் கோரிக்கைகளும் புறக்கணிக்கப்படாது என்பதை இது உணர்த்துகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!