India
50% விவிபேட் வாக்கு எண்ணிக்கை மீதான 21 எதிர்க்கட்சிகளின் சீராய்வு மனு தள்ளுபடி!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான 5 கட்ட வாக்குப்பதிவுகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. எஞ்சியுள்ள 2 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவும் மே 12 மற்றும் 19ம் தேதி அன்று நடைபெறுகிறது.
இந்நிலையில், தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் போது இ.வி.எம் இயந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளை 50% வி.வி.பேட் (VVPAT) ஒப்புகை வாக்குகளுடன் சரிபார்த்து எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, தி.மு.க, தெலுங்கு தேசம், காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள 5 இ.வி.எம். இயந்திரத்தில் உள்ள வாக்குகளை ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்க வேண்டுமென உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து 21 எதிர்க்கட்சிகளும் சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தன. சீராய்வு மனு இன்று விசாரணைக்கு வந்த போது அதனை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 50% விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகை வாக்குகளை எண்ணினால், கால தாமதமாகும் என்பதால், தொகுதிக்கு 5 இ.வி.எம் இயந்திரத்தில் உள்ள வாக்குகளை ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்க மட்டுமே உத்தர்விட முடியும் எனக் கூறி எதிர்க்கட்சிகளின் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.
Also Read
-
“தமிழ் மீனவர்களை கைவிடும் ஒன்றிய அரசு!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!
-
திருவண்ணாமலையில் 33 ஏக்கர் பரப்பளவில் ‘மு.க.ஸ்டாலின் பூங்கா’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
”திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பார்க்கிறது பா.ஜ.க” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!
-
“தமிழ்நாடுதான் Electronics துறையின் Capital” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மதுரை மீது பா.ஜ.க.வுக்கு ஏன் இத்தனை வன்மம்? : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சரமாரி கேள்வி!