India
5-ம் கட்ட மக்களவைத் தேர்தல் : சராசரியாக 61% வாக்குப்பதிவு!
மக்களவைத் தேர்தலின் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. 7 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் 6 மணி நிலவரப்படி சராசரியாக 60.80% வாக்குகள் பதிவாகியுள்ளன.
உத்தரபிரதேசத்தில் 14, ராஜஸ்தானில் 12, மத்திய பிரதேசத்தில் 7, மேற்கு வங்கத்தில் 7, பீகாரில் 5, ஜார்கண்டில் 4, காஷ்மீரில் 2 தொகுதிகள் என 7 மாநிலங்களில் மொத்தம் 51 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
உத்தர பிரதேச மாநிலத்தில் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி, ராகுல் போட்டியிட்ட அமேதி, ராஜ்நாத்சிங் போட்டியிட்ட லக்னோ ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு எதிர்பார்த்ததை விட அதிகமாக காணப்பட்டது.
மேற்குவங்க மாநிலத்தில் பல ஓட்டுச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு மாற்று எந்திரங்கள் வந்தபிறகு தாமதமாகவே வாக்குப்பதிவு தொடங்கியது.
6 மணி நிலவரப்படி தோராயமான வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். அதன்படி, மாநிலங்கள் வாரியாக வாக்குப்பதிவு சதவீதம் பின்வருமாறு :
பீகார் - 56.79%
ஜம்மு காஷ்மீர் - 17.07%
மத்திய பிரதேசம் - 62.96%
ராஜஸ்தான் - 63.03%
உத்தர பிரதேசம் - 53.32%
மேற்கு வங்கம் - 74.06%
ஜார்க்கண்ட் - 63.99%
Also Read
-
இந்தியாவில் 67% பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் : வெளியான அதிர்ச்சி அறிக்கை!
-
நாடாளுமன்றத்தின் அலுவல் தொடர்பிற்கு ஏன் இந்தி மொழி ஆதிக்கம்? : துரை வைகோ எம்.பி கண்டனம்!
-
ஜவுளி ஏற்றுமதி : குஜராத்தை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
“தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால்; தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள்!” - முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!