India
5-ம் கட்ட மக்களவைத் தேர்தல் : சராசரியாக 61% வாக்குப்பதிவு!
மக்களவைத் தேர்தலின் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. 7 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் 6 மணி நிலவரப்படி சராசரியாக 60.80% வாக்குகள் பதிவாகியுள்ளன.
உத்தரபிரதேசத்தில் 14, ராஜஸ்தானில் 12, மத்திய பிரதேசத்தில் 7, மேற்கு வங்கத்தில் 7, பீகாரில் 5, ஜார்கண்டில் 4, காஷ்மீரில் 2 தொகுதிகள் என 7 மாநிலங்களில் மொத்தம் 51 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
உத்தர பிரதேச மாநிலத்தில் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி, ராகுல் போட்டியிட்ட அமேதி, ராஜ்நாத்சிங் போட்டியிட்ட லக்னோ ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு எதிர்பார்த்ததை விட அதிகமாக காணப்பட்டது.
மேற்குவங்க மாநிலத்தில் பல ஓட்டுச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு மாற்று எந்திரங்கள் வந்தபிறகு தாமதமாகவே வாக்குப்பதிவு தொடங்கியது.
6 மணி நிலவரப்படி தோராயமான வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். அதன்படி, மாநிலங்கள் வாரியாக வாக்குப்பதிவு சதவீதம் பின்வருமாறு :
பீகார் - 56.79%
ஜம்மு காஷ்மீர் - 17.07%
மத்திய பிரதேசம் - 62.96%
ராஜஸ்தான் - 63.03%
உத்தர பிரதேசம் - 53.32%
மேற்கு வங்கம் - 74.06%
ஜார்க்கண்ட் - 63.99%
Also Read
-
ஜூம்லா விடும் மோடி அரசு : “மக்களை என்றைக்காவது மகிழச் செய்தது உண்டா?” - கி.வீரமணி சரமாரி கேள்வி!
-
“ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே!” : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
“இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்லும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்!” : சரவணன் அண்ணாதுரை விமர்சனம்!
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!