India
காங்கிரஸ் ஆட்சியில் 6 சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்! - பா.ஜ.கவின் பிரசாரத்துக்கு காங்கிரஸ் பதிலடி!
இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும்போது பா.ஜ.க அரசு தீவிரவாத முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துகிறது என பிரதமர் மோடியும், பா.ஜ.க-வினரும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக, காங்கிரஸ் ஆட்சியில் 6 முறை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டிருப்பதாக தேதி வாரியாக தகவல்களை வெளியிட்டுள்ளது காங்கிரஸ்.
மேலும், தங்கள் ஆட்சியில் 6 முறை பாகிஸ்தான் பகுதியில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டுள்ளது எனவும், ஆனால், இராணுவ வீரர்களை தேவையில்லாமல் அரசியலுக்கு இழுக்க விரும்பாததால் அவற்றைப் பற்றிப் பேசவில்லை எனவும் காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில், தேசபக்தியைத் தூண்டிவிடும் பா.ஜ.க-வின் தந்திரமான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பிரசாரத்துக்கு பதிலடியாக காங்கிரஸ் ஆட்சியில் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதல்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
முதல் தாக்குதல் ஜூன் 19, 2008-ல் பூஞ்சின் பாதல் செக்டாரில் நடத்தப்பட்டது. இரண்டாவது தாக்குதல் ஆகஸ்ட் 30 - செப்டம்பர் 1, 2011-ல் நீலம் ஆற்றுப்படுகையில் உள்ள சார்தா செக்டாரில் நடத்தப்பட்டது.
மூன்றாவது தாக்கல் ஜனவரி 6, 2013-ல் சுவான் பாத்ரா செக்போஸ்ட் பகுதியில் நடத்தப்பட்டது. அடுத்த தாக்குதல் ஜூலை 27 மற்றும் ஜூலை 28, 2013-ல் நசாபியர் செக்டாரில் நடத்தப்பட்டது. ஐந்தாவது தாக்குதல் நீலம் பள்ளத்தாக்கில் ஆகஸ்ட் 6, 2013-ல் நடத்தப்பட்டது, ஆறாவது முறையாக ஜனவரி 14, 2014-ல் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது என காங்கிரஸ் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
உழவர்களை ஒழிக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் அதிகாரத் திமிர் : தி.மு.க IT WING கண்டனம்!
-
இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்லும் மாநிலம் தமிழ்நாடு : ராதாபுரத்தில் கனிமொழி MP பேச்சு!
-
3 நாட்கள் : சென்னை மாவட்டத்தில் அஞ்சல் பாக்குப்பதிவு - வீட்டிற்கே வரும் தேர்தல் அதிகாரிகள்!
-
நெல் ஊக்கத்தொகை.. வெளியான பரபரப்பு கடிதம்.. அம்பலப்பட்ட பாஜக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பொய்கள்!
-
குடிநீர் விவகாரம் : நாட்டக்குடி கிராமம் குறித்த அண்ணாமலையின் பொய் பிரச்சாரம்... அம்பலப்படுத்திய கருணாஸ்!