India
காங்கிரஸ் ஆட்சியில் 6 சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்! - பா.ஜ.கவின் பிரசாரத்துக்கு காங்கிரஸ் பதிலடி!
இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும்போது பா.ஜ.க அரசு தீவிரவாத முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துகிறது என பிரதமர் மோடியும், பா.ஜ.க-வினரும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக, காங்கிரஸ் ஆட்சியில் 6 முறை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டிருப்பதாக தேதி வாரியாக தகவல்களை வெளியிட்டுள்ளது காங்கிரஸ்.
மேலும், தங்கள் ஆட்சியில் 6 முறை பாகிஸ்தான் பகுதியில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டுள்ளது எனவும், ஆனால், இராணுவ வீரர்களை தேவையில்லாமல் அரசியலுக்கு இழுக்க விரும்பாததால் அவற்றைப் பற்றிப் பேசவில்லை எனவும் காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில், தேசபக்தியைத் தூண்டிவிடும் பா.ஜ.க-வின் தந்திரமான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பிரசாரத்துக்கு பதிலடியாக காங்கிரஸ் ஆட்சியில் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதல்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
முதல் தாக்குதல் ஜூன் 19, 2008-ல் பூஞ்சின் பாதல் செக்டாரில் நடத்தப்பட்டது. இரண்டாவது தாக்குதல் ஆகஸ்ட் 30 - செப்டம்பர் 1, 2011-ல் நீலம் ஆற்றுப்படுகையில் உள்ள சார்தா செக்டாரில் நடத்தப்பட்டது.
மூன்றாவது தாக்கல் ஜனவரி 6, 2013-ல் சுவான் பாத்ரா செக்போஸ்ட் பகுதியில் நடத்தப்பட்டது. அடுத்த தாக்குதல் ஜூலை 27 மற்றும் ஜூலை 28, 2013-ல் நசாபியர் செக்டாரில் நடத்தப்பட்டது. ஐந்தாவது தாக்குதல் நீலம் பள்ளத்தாக்கில் ஆகஸ்ட் 6, 2013-ல் நடத்தப்பட்டது, ஆறாவது முறையாக ஜனவரி 14, 2014-ல் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது என காங்கிரஸ் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!
-
”அடுத்தடுத்த அரிவாள் வெட்டு.. அச்சத்தில் மக்கள்.. தறிகெட்டுப் போன சட்டம் ஒழுங்கு” : முழு விவரம்!
-
நடிகர் அஜித்குமார் தாயார் காலமானார் : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
”சறுக்கலை சந்தித்த முதல்வர் விஜயின் டெல்லி பயணம்.. செய்தியாளர்களா.. பதறிய விஜய்” : முரசொலி தலையங்கம்!
-
ஆசிரியப் பெருமக்களைப் பாதுகாக்கும் பணியில் உடனே இறங்குங்கள்! வீரவசனம் வேண்டாம் : அன்பில் மகேஸ் பொய்யாமொழி