India
விவசாயிகள் மீதான வழக்கை வாபஸ் பெற்றது பெப்சி: விவசாயிகள் மகிழ்ச்சி!
வெளிநாட்டு கார்ப்ரேட் குளிர்பான நிறுவனம் பெப்சி கோ. இந்த லேஸ் சிப்ஸ்களை தயாரித்து விற்பனை செய்துவருகிறது. இந்த நிறுவனம் உருளைக் கிழங்கு சிப்ஸ்னை தயாரிப்பதற்கு FL 2027 என்ற பிரத்தியேக கிழங்குகளை பயன்படுத்திவருகிறது. இதற்கான காப்புரிமையை அந்த நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் குஜராத்தைச் சேர்ந்த விவசாயிகள் 4 பேர், பெப்சி பயன்படுத்திய உருளைக் கிழங்கு ரகத்தைப் பயன்படுத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. காப்புரிமை பெற்று வைத்திருப்பதால், FL 2027 ரக உருளைக் கிழங்கு விதையைப் பயன்படுத்தியதற்காக, ரூ. 1 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று பெப்சி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வழக்கு தொடரப்பட்ட 4 விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பினர். இந்தியா முழுவதும் விவசாயிகள் அமைப்பு, மாணவர்கள் அமைப்பு எதிர்க்கட்சிகள் என விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கினார்கள்.
போராட்டத்தின் கோரிக்கைகளை முன்வைத்து பெப்சி கோவுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து 4 விவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட வழக்கை பெப்சி திரும்ப பெறுவதாக அறிவித்திருக்கிறது.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!