India
விவசாயிகள் மீதான வழக்கை வாபஸ் பெற்றது பெப்சி: விவசாயிகள் மகிழ்ச்சி!
வெளிநாட்டு கார்ப்ரேட் குளிர்பான நிறுவனம் பெப்சி கோ. இந்த லேஸ் சிப்ஸ்களை தயாரித்து விற்பனை செய்துவருகிறது. இந்த நிறுவனம் உருளைக் கிழங்கு சிப்ஸ்னை தயாரிப்பதற்கு FL 2027 என்ற பிரத்தியேக கிழங்குகளை பயன்படுத்திவருகிறது. இதற்கான காப்புரிமையை அந்த நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் குஜராத்தைச் சேர்ந்த விவசாயிகள் 4 பேர், பெப்சி பயன்படுத்திய உருளைக் கிழங்கு ரகத்தைப் பயன்படுத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. காப்புரிமை பெற்று வைத்திருப்பதால், FL 2027 ரக உருளைக் கிழங்கு விதையைப் பயன்படுத்தியதற்காக, ரூ. 1 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று பெப்சி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வழக்கு தொடரப்பட்ட 4 விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பினர். இந்தியா முழுவதும் விவசாயிகள் அமைப்பு, மாணவர்கள் அமைப்பு எதிர்க்கட்சிகள் என விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கினார்கள்.
போராட்டத்தின் கோரிக்கைகளை முன்வைத்து பெப்சி கோவுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து 4 விவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட வழக்கை பெப்சி திரும்ப பெறுவதாக அறிவித்திருக்கிறது.
Also Read
-
“மாணவர் நலனில் அக்கறை இருப்பதுபோல், நீலிக்கண்ணீர் வடிக்கும் அன்புமணி” : அமைச்சர் கோவி.செழியன் பதிலடி!
-
கொளத்தூர் : 2007 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பாட்டாக்கள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“எல்லோருக்கும் இது பிப்ரவரி மாதம்! ஆனால், திமுக-வுக்கு இது ‘மாநாடு மாதம்!’” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
கொளத்தூர் கபாலீசுவரர் கல்லூரி : ரூ.31.45 கோடி செலவில் புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் !
-
“ED, IT, CBI-யை ஒரு கை பார்க்க நாங்களும் தயாராகதான் இருக்கிறோம்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!