India
மக்களவைத் தேர்தல்: 72 தொகுதிகளில் நாளை 4-ம் கட்ட வாக்குப்பதிவு
மக்களவைத் தேர்தலின் 4-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது. 9 மாநிலங்களைச் சேர்ந்த 72 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடக்கிறது. மொத்தம் 943 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த 72 தொகுதிகளுக்கான பிரசாரம் சனிக்கிழமை மாலையோடு ஓய்ந்தது. நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு செய்ய வாக்காளர்கள் அனுமதிக்கப்படுவர்.
பீகார் ( 5), ஜம்மு காஷ்மீர்(1), ஜார்கண்ட் (3), மத்திய பிரதேசம் (6), மஹாராஷ்டிரா (17), ஒடிசா ( 6), ராஜஸ்தான் (13), உத்தர பிரதேசம் (13), மேற்குவங்கம்(8) என மொத்தம் 72 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கின்றன.
பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக ஜவஹர்லால் நேரு மத்திய பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் கன்னையா குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜ.க வேட்பாளராக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் போட்டியிடுவதால், இந்த தொகுதியின் தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகளின் போரட்டங்கள் அதிகம் உள்ள பண்டல்கண்ட் பகுதி வாக்குப்பதிவும் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.
Also Read
-
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று வாக்குப்பதிவு! : இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
-
NDA-க்கு எதிராக முழங்கிய தமிழ்நாடு! : மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! : தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!
-
“மக்களுக்காக மேலும் உழைக்க காத்திருக்கிறோம்!” : திருப்பத்தூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!