India
மக்களவைத் தேர்தல்: 72 தொகுதிகளில் நாளை 4-ம் கட்ட வாக்குப்பதிவு
மக்களவைத் தேர்தலின் 4-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது. 9 மாநிலங்களைச் சேர்ந்த 72 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடக்கிறது. மொத்தம் 943 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த 72 தொகுதிகளுக்கான பிரசாரம் சனிக்கிழமை மாலையோடு ஓய்ந்தது. நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு செய்ய வாக்காளர்கள் அனுமதிக்கப்படுவர்.
பீகார் ( 5), ஜம்மு காஷ்மீர்(1), ஜார்கண்ட் (3), மத்திய பிரதேசம் (6), மஹாராஷ்டிரா (17), ஒடிசா ( 6), ராஜஸ்தான் (13), உத்தர பிரதேசம் (13), மேற்குவங்கம்(8) என மொத்தம் 72 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கின்றன.
பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக ஜவஹர்லால் நேரு மத்திய பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் கன்னையா குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜ.க வேட்பாளராக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் போட்டியிடுவதால், இந்த தொகுதியின் தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகளின் போரட்டங்கள் அதிகம் உள்ள பண்டல்கண்ட் பகுதி வாக்குப்பதிவும் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!