India
மோசடியால் பாதிக்கப்பட்டோருக்கு, ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் தீர்வு - காங்கிரஸ் அறிக்கை!
'காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 'பியர்ல்ஸ் சிட்பண்ட்' மோசடியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும்' என காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பியர்ல்ஸ் அக்ரோடெக் கார்ப்பரேஷன்' என்ற தனியார் நிதி நிறுவனம் நாடு முழுவதும் மக்களிடம் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நிறுவனம் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், பா.ஜ.க அரசு மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் முதலீடுகள் வட்டியுடன் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ 'பியர்ல்ஸ் சிட்பண்ட்' மோசடியால் நாடு முழுவதும் 5.85 கோடி குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்தியில் காங்கிரஸ் மீண்டும் அமைந்ததும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மூன்று மாதங்களுக்குள் அவர்கள் முதலீடுகளை வட்டியுடன் திரும்பப் பெற்றுத் தர கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!