India
மோடிக்காக கழுவப்பட்ட சாலைகள் - 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் வீண்!
பிரதமர் மோடி தான் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் நேற்று பேரணி ஒன்றை நடத்தினார். அதற்காக சாலையைக் கழுவிச் சுத்தம் செய்வதற்காக 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வாரணாசியில் நேற்று பேரணியை மேற்கொண்டார். இதில் ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வினர் கலந்து கொண்டனர். தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ், அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோரும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.
மோடி கலந்துகொள்ளும் பேரணிக்காக நகரை சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக வாரணாசி சாலைகள் குடிநீரைக் கொண்டு சுத்தம் செய்யப்பட்டுளன. இதனால் வாரணாசியில் சுமார் 30% மக்கள் குடிநீர் தண்ணீர் இல்லாமல் அவதியுறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வாரணாசி மாநகராட்சியின் 40 தண்ணீர் டேங்கர்கள், 400 பணியாளர்கள் இந்தப் பணிக்காக இரவுப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தான் வெற்றி பெறுவதற்காக ஒட்டுமொத்த மக்களையும் அவதிக்குள்ளாக்கி இருக்கிறார் மோடி.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !