India
மோடிக்காக கழுவப்பட்ட சாலைகள் - 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் வீண்!
பிரதமர் மோடி தான் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் நேற்று பேரணி ஒன்றை நடத்தினார். அதற்காக சாலையைக் கழுவிச் சுத்தம் செய்வதற்காக 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வாரணாசியில் நேற்று பேரணியை மேற்கொண்டார். இதில் ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வினர் கலந்து கொண்டனர். தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ், அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோரும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.
மோடி கலந்துகொள்ளும் பேரணிக்காக நகரை சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக வாரணாசி சாலைகள் குடிநீரைக் கொண்டு சுத்தம் செய்யப்பட்டுளன. இதனால் வாரணாசியில் சுமார் 30% மக்கள் குடிநீர் தண்ணீர் இல்லாமல் அவதியுறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வாரணாசி மாநகராட்சியின் 40 தண்ணீர் டேங்கர்கள், 400 பணியாளர்கள் இந்தப் பணிக்காக இரவுப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தான் வெற்றி பெறுவதற்காக ஒட்டுமொத்த மக்களையும் அவதிக்குள்ளாக்கி இருக்கிறார் மோடி.
Also Read
-
“இது நூல் அல்ல, நமது போர் ஆயுதம்”: ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி உரை!
-
“நமது ஆட்சியின் Diary ; எதிரிகளுக்கு பதில் சொல்லும் நூல்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் : ஜன.14 ஆம் தேதி தொடங்கிறது சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா
-
சென்னை மெட்ரோ ரயில் Phase II : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
வேளாங்கண்ணி TO இலங்கை... ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!