India
மோடிக்காக கழுவப்பட்ட சாலைகள் - 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் வீண்!
பிரதமர் மோடி தான் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் நேற்று பேரணி ஒன்றை நடத்தினார். அதற்காக சாலையைக் கழுவிச் சுத்தம் செய்வதற்காக 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வாரணாசியில் நேற்று பேரணியை மேற்கொண்டார். இதில் ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வினர் கலந்து கொண்டனர். தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ், அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோரும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.
மோடி கலந்துகொள்ளும் பேரணிக்காக நகரை சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக வாரணாசி சாலைகள் குடிநீரைக் கொண்டு சுத்தம் செய்யப்பட்டுளன. இதனால் வாரணாசியில் சுமார் 30% மக்கள் குடிநீர் தண்ணீர் இல்லாமல் அவதியுறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வாரணாசி மாநகராட்சியின் 40 தண்ணீர் டேங்கர்கள், 400 பணியாளர்கள் இந்தப் பணிக்காக இரவுப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தான் வெற்றி பெறுவதற்காக ஒட்டுமொத்த மக்களையும் அவதிக்குள்ளாக்கி இருக்கிறார் மோடி.
Also Read
-
மாநிலங்களவை தேர்தல் : தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!
-
திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
5 ஆண்டுகளில் மாபெரும் சாதனை.. 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கி செல்லும் தமிழ்நாடு!
-
“பா.ஜ.க தொட்டதெல்லாம் பஸ்பமாகிவிடும்; அ.தி.மு.க?” : ப.சிதம்பரம் கடும் விமர்சனம்!
-
பாஜகவின் தொடர் அழுத்தம்.. முதலமைச்சராக பதவியேற்ற 4 மாதங்களில் ராஜினாமா.. நிதிஷின் முடிவால் பீகாரில் பரபர!