India
இலங்கை தாக்குதல் : சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வெளியீடு!
இலங்கை தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலை நிகழ்த்திய தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 9 பேரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது இலங்கை அரசு.
இலங்கையில் கடந்த ஞாயிறன்று தேவாலயங்கள், ஹோட்டல்கள் உள்பட பல்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. எட்டு இடங்களில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இலங்கையில் தற்போதும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் இன்னும் பதற்றமான சூழலே நிலவி வருகிறது. இதற்கிடையே, இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், குண்டுவெடிப்புத் தாக்குதலை நிகழ்த்திய தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 9 பேரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது இலங்கை அரசு. இவர்களில் 3 பெண்களும் அடக்கம்.
சந்தேக நபர்கள் குறித்த தகவல் கிடைத்தால் தெரியப்படுத்துமாறு அரசும், காவல்துறையினரும் பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். தகவல் தெரிவிப்பதற்கான தொலைபேசி எண்களையும் வெளியிட்டுள்ளது இலங்கை அரசு.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!