India
“மோடி, கார்ப்பரேட் பணக்காரர்களின் வீட்டு வாசலில் தான் காவல் நிற்கிறார்” - சித்து விளாசல்!
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, பா.ஜ.க அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“பா.ஜ.க அரசு பொதுத்துறை நிறுவனங்களைக் காட்டிலும் தனியார் தொழில் நிறுவனங்கள் மீதே அதீத அக்கறை செலுத்துகிறது.” எனக் குற்றம் சாட்டியுள்ளார் சித்து.
மேலும், “தேசத்தின் காவலன் என்று மார்தட்டிக் கொள்ளும் பிரதமர் மோடி, கார்ப்பரேட் பணக்காரர்களின் வீட்டு வாசலில் தான் காவல் நிற்கிறார். அம்பானி, அதானி போன்ற தொழிலதிபர்களுடன் 55 நாடுகளுக்குச் சென்றிருக்கும் மோடி அவர்களது நிறுவனங்களுக்காகவே உழைக்கிறார்.” என்றார்.
மேலும் பேசிய அவர் “தான் ஒரு தேசபக்தர் எனக் கூறிக்கொள்ளும் மோடி பொதுத்துறை நிறுவனங்களை சிதைத்து வருகிறார். தனியார் நிறுவனங்களை வாழ வைக்கிறார். BHEL, BSNL உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கும்போது ரிலையன்ஸ் நிறுவனம் தனது காலாண்டு வருமானத்தை ரூ.10,000 கோடி எனத் தெரிவிக்கிறது.
மோடி இந்த நாட்டின் பிரதமரா இல்லை அம்பானிக்கும், அதானிக்குமான தொழில் மேம்பாட்டு மேனேஜரா என்று தெரியவில்லை" என பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!