India
“மோடி, கார்ப்பரேட் பணக்காரர்களின் வீட்டு வாசலில் தான் காவல் நிற்கிறார்” - சித்து விளாசல்!
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, பா.ஜ.க அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“பா.ஜ.க அரசு பொதுத்துறை நிறுவனங்களைக் காட்டிலும் தனியார் தொழில் நிறுவனங்கள் மீதே அதீத அக்கறை செலுத்துகிறது.” எனக் குற்றம் சாட்டியுள்ளார் சித்து.
மேலும், “தேசத்தின் காவலன் என்று மார்தட்டிக் கொள்ளும் பிரதமர் மோடி, கார்ப்பரேட் பணக்காரர்களின் வீட்டு வாசலில் தான் காவல் நிற்கிறார். அம்பானி, அதானி போன்ற தொழிலதிபர்களுடன் 55 நாடுகளுக்குச் சென்றிருக்கும் மோடி அவர்களது நிறுவனங்களுக்காகவே உழைக்கிறார்.” என்றார்.
மேலும் பேசிய அவர் “தான் ஒரு தேசபக்தர் எனக் கூறிக்கொள்ளும் மோடி பொதுத்துறை நிறுவனங்களை சிதைத்து வருகிறார். தனியார் நிறுவனங்களை வாழ வைக்கிறார். BHEL, BSNL உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கும்போது ரிலையன்ஸ் நிறுவனம் தனது காலாண்டு வருமானத்தை ரூ.10,000 கோடி எனத் தெரிவிக்கிறது.
மோடி இந்த நாட்டின் பிரதமரா இல்லை அம்பானிக்கும், அதானிக்குமான தொழில் மேம்பாட்டு மேனேஜரா என்று தெரியவில்லை" என பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
Also Read
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!