India
பா.ஜ.க ஆளும் திரிபுராவில் நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைப்பு!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்.,18) தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தலை ரத்து செய்ததால், தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கு மட்டும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதேபோல், பா.ஜ.க. ஆளும் திரிபுரா மாநிலத்தின் கிழக்கு மக்களவைத் தொகுதிக்கான தேர்தலை ஏப்ரல் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது தேர்தல் ஆணையம்.
திரிபுரா மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு அச்சுறுத்தல் உள்ளதால் கிழக்கு பகுதியில் தேர்தல் நடத்துவதற்கான கள நிலவரங்கள் ஏதுவாக இல்லாததால் தேர்தல் அதிகாரி - சிறப்பு காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்று தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தேதியை 23-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதற்கிடையில், திரிபுராவின் மேற்கு பகுதியில் கடந்த 11-ம் தேதி நடந்த வாக்குப்பதிவில் குளறுபடிகள் நடந்ததாகவும், 464 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்தவும் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!