India
பா.ஜ.க ஆளும் திரிபுராவில் நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைப்பு!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்.,18) தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தலை ரத்து செய்ததால், தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கு மட்டும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதேபோல், பா.ஜ.க. ஆளும் திரிபுரா மாநிலத்தின் கிழக்கு மக்களவைத் தொகுதிக்கான தேர்தலை ஏப்ரல் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது தேர்தல் ஆணையம்.
திரிபுரா மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு அச்சுறுத்தல் உள்ளதால் கிழக்கு பகுதியில் தேர்தல் நடத்துவதற்கான கள நிலவரங்கள் ஏதுவாக இல்லாததால் தேர்தல் அதிகாரி - சிறப்பு காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்று தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தேதியை 23-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதற்கிடையில், திரிபுராவின் மேற்கு பகுதியில் கடந்த 11-ம் தேதி நடந்த வாக்குப்பதிவில் குளறுபடிகள் நடந்ததாகவும், 464 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்தவும் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!
-
ஒரே ஆண்டில் 17,702 பேருக்கு அரசு வேலை : சாதனை படைத்த TNPSC!
-
”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!