India
“யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என மோடி சிசிடிவி மூலம் பார்ப்பார்”- எம்எல்ஏ பகிரங்க மிரட்டல்!
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 18-ம் தேதி நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் வரும் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராகப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பா.ஜ.க-வினரும், பா.ஜ.க கூட்டணியில் இருப்போரும் தொடர்ச்சியாக ஜனநாயக விரோத பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி மக்களிடம் மிரட்டல் விடுக்கும் தொனியில் வாக்கு சேகரித்து வருவது கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ரமேஷ் கடாரா, “யார் யார் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்கிறீர்கள்.. யார் யார் காங்கிரஸுக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதையெல்லாம் கண்காணிக்க பிரதமர் மோடி வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளார். பா.ஜ.க-வுக்கு குறைவான வாக்குகள் வரும் பகுதியில் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்காது.” என மிரட்டல் விடுத்துள்ளார்.
சமீபத்தில், பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பா.ம.க-வின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “வாக்குச்சாவடிகளில் நாம் மட்டும்தான் இருப்போம். புரியுதுல்ல..” என உள்நோக்கத்துடன் பேசி சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
44 காவல்துறையினருக்கு குடியரசு தின பதக்கங்கள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
இந்திய கிரிக்கெட் அணி படைத்த இமாலய சாதனை... மிரட்டிய இஷான் கிஷனின் ஆட்டம்! நாலாபுறமும் சிதறிய பந்துகள்!
-
துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் - பெரும் அநீதி: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்
-
நீக்கப்படும் 16,000 பணியாளர்கள்? அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் அமேசான்... திணறும் ஊழியர்கள்!
-
“எலும்பில்லா நாக்கு எப்படியும் பேசும்” : பிரதமர் மோடியின் உரைக்கு மு.வீரபாண்டியன் கண்டனம்!