DMK Government
“தூக்கிப்போட்டு மிதிச்சேன்னா பல்லு கில்லு எல்லாம் வெளியே வந்துடும்” - பகிரங்க மிரட்டல் விடுத்த அண்ணாமலை!
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பாகப் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை தோல்வி பயத்தில் பிரசாரத்தின்போது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வருகிறார்.
நேற்று கரூர் தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜியின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசிய அண்ணாமலை “தூக்கிப்போட்டு மிதிச்சேன்னா பல்லு கில்லு எல்லாம் வெளியே வந்துடும். தேர்தல் ஆணையத்தைப் பார்த்தெல்லாம் பயப்படமாட்டேன்.” என வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியுள்ளார்.
நேற்று பா.ஜ.க-வுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவை வந்திருந்தார். இதையொட்டி பா.ஜ.க-வினர் பேரணி நடத்தினர். அப்போது கடைகளை அடைக்கச் சொல்லி வியாபாரிகளைத் தாக்கினர்.
வியாபாரிகளைத் தாக்கிய பா.ஜ.க குண்டர்களை தடுக்க முயன்ற போலிஸாரையும் அவர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மசூதிக்கு அருகே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.
தேர்தல் பிரசாரத்தின்போதே மத வெறுப்பைத் தூண்டி, சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் பா.ஜ.க-வினர் செயல்பட்டு வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான பா.ஜ.க-வின் அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் தி.மு.க வேட்பாளரின் பெயரைக் குறிப்பிட்டு கொலை மிரட்டல் விடுத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க ஒரு தொகுதியில் வென்றாலும், உ.பி, குஜராத் போல தமிழகத்தை வன்முறைக் காடாக்கிவிடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!