DMK Government
எழும்பூர் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் திட்டம்? - தி.மு.க தரப்பில் புகார் மனு!
தி.மு.க சட்டப்பிரிவு இணைச் செயலாளரும், எழும்பூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளருமான இ.பரந்தாமன் தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி கைப்பற்றுவதில் தற்போதைய அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியன் ஈடுபட்டதால் குறைவான வாக்குகளே பதிவானதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அ.தி.மு.க கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஜான் பாண்டியன் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அவற்றில் ஜாமின் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் வாக்குச்சாவடியை கைப்பற்றுதல், வாக்காளர்களை கடத்துதல் போன்ற ஜனநாயக விரோத செயல்களில் ஜான்பாண்டியன் ஈடுபட உள்ளதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
அவற்றிலிருந்து வாக்காளர்களை பாதுகாத்து, அச்சமின்றி ஜனநாயக கடமையை செலுத்தும் வகையில் எழும்பூர் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளையும் பதற்றமானவை என அறிவிக்க வேண்டும் என்றும், அவற்றுக்குத் தேவையான சிஐஎஸ்எப் போலீஸ் பாதுகாப்பை வழங்க தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இ.பரந்தாமன் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
கருப்புக்கொடி போராட்டம் டிரெயிலர்தான் மெயின் பிக்சரை பார்க்க ஆசைப்பட கூடாது - CM MK Stalin எச்சரிக்கை!
-
தமிழ்நாட்டு மண் ஒருநாளும் பாஜகவின் ஆணவத் திமிருக்கு அடிபணியாது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
#Delimitation : தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
‘ரெஸ்ட்’ இல்லாமல் உழைக்கும் பெண்களுக்கு தரும் ‘ரெஸ்பெக்ட்’ உரிமைத்தொகை : சேலத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
”தொகுதி மறுவரையறை மசோதா.. வடக்கில் வென்று ஆட்சியை பிடிக்கலாம் என்ற நினைப்பு” : முரசொலி விமர்சனம்!