DMK Government
எழும்பூர் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் திட்டம்? - தி.மு.க தரப்பில் புகார் மனு!
தி.மு.க சட்டப்பிரிவு இணைச் செயலாளரும், எழும்பூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளருமான இ.பரந்தாமன் தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி கைப்பற்றுவதில் தற்போதைய அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியன் ஈடுபட்டதால் குறைவான வாக்குகளே பதிவானதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அ.தி.மு.க கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஜான் பாண்டியன் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அவற்றில் ஜாமின் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் வாக்குச்சாவடியை கைப்பற்றுதல், வாக்காளர்களை கடத்துதல் போன்ற ஜனநாயக விரோத செயல்களில் ஜான்பாண்டியன் ஈடுபட உள்ளதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
அவற்றிலிருந்து வாக்காளர்களை பாதுகாத்து, அச்சமின்றி ஜனநாயக கடமையை செலுத்தும் வகையில் எழும்பூர் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளையும் பதற்றமானவை என அறிவிக்க வேண்டும் என்றும், அவற்றுக்குத் தேவையான சிஐஎஸ்எப் போலீஸ் பாதுகாப்பை வழங்க தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இ.பரந்தாமன் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!