DMK Government
புதுச்சேரியில் அடித்துக்கொள்ளும் அ.தி.மு.க- பா.ஜ.க : சீட் பிரிப்பதில் நீடிக்கும் சிக்கல்!
கடந்த மாதம் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் சதியால் புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ், தி.மு.க தலைமையிலான கூட்டணி ஒருபுறமும், பா.ஜ.க, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க கூட்டணி ஒரு பக்கமும்,தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன.
இதனையெடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவரை சந்தித்த புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட், வி.சி.க முறையே தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுவது என முடிவு செய்து பங்கீடு நிறைவுபெற்றது.
ஆனால் எதிர்தரப்பிலோ எஜமான் பா.ஜ.கவும் அடிமை அ.தி.மு.கவும் முட்டிக்கொண்டு நிற்கின்றன. இந்நிலையில், நீங்க எப்படியோ சண்டை போட்டுக்கோங்க நாங்க எங்க வேலைய பார்க்குறோம் என தங்களுக்கான 16 தொகுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் பெற்றுக் கொண்டது என்.ஆர்.காங்கிரஸ்.
சமீபத்தில் தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர், கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், மீதமுள்ள 14 தொகுதிகளில் பா.ஜகவும், அ.தி.மு.கவும் போட்டியிடும் என்று அறிவித்து ரங்கசாமியும், பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க, அ.தி.மு.க இடையே தொகுதிப் பங்கீட்டில் கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்து வருவதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் பா.ஜ.க, அ.தி.மு.கவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்குவதாக கூறியிருக்கிறது. ஆனால், கூடுதல் தொகுதிகள் கேட்டு புதுச்சேரி அ.தி.மு.கவினர் அடம் பிடிக்கின்றனர். தமிழக அ.தி.மு.க தலைமையோ பா.ஜ.க கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக் கொள்ளுங்கள் எனச் சொல்கிறதாம். இதனால், புதுச்சேரி அ.தி.மு.கவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
- நிதர்சன் உதயா
Also Read
-
“பாஜக டப்பா எஞ்சின் முன், திராவிட மாடல் Superfast Engine தலைகுனியாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது! அது அனைவருக்கும் தெரியும்!”: முதலமைச்சர் திட்டவட்டம்!
-
“ஆளத் தெரியாமல், இந்தியாவை அடகு வைக்கும் பா.ஜ.க.விடமிருந்து நாட்டைக் காப்போம்!” : கி.வீரமணி அறிக்கை!
-
இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘பேட்’ குறித்து சர்ச்சை கிளப்பிய இலங்கை வீரர்! : முழு விவரம் உள்ளே!
-
“இந்திய நாட்டை விற்க பா.ஜ.க-வுக்கு வெட்கமாக இல்லையா?” : மக்களவையில் ராகுல் காந்தி எம்.பி. சரமாரி கேள்வி!