DMK Government
புதுச்சேரியில் அடித்துக்கொள்ளும் அ.தி.மு.க- பா.ஜ.க : சீட் பிரிப்பதில் நீடிக்கும் சிக்கல்!
கடந்த மாதம் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் சதியால் புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ், தி.மு.க தலைமையிலான கூட்டணி ஒருபுறமும், பா.ஜ.க, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க கூட்டணி ஒரு பக்கமும்,தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன.
இதனையெடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவரை சந்தித்த புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட், வி.சி.க முறையே தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுவது என முடிவு செய்து பங்கீடு நிறைவுபெற்றது.
ஆனால் எதிர்தரப்பிலோ எஜமான் பா.ஜ.கவும் அடிமை அ.தி.மு.கவும் முட்டிக்கொண்டு நிற்கின்றன. இந்நிலையில், நீங்க எப்படியோ சண்டை போட்டுக்கோங்க நாங்க எங்க வேலைய பார்க்குறோம் என தங்களுக்கான 16 தொகுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் பெற்றுக் கொண்டது என்.ஆர்.காங்கிரஸ்.
சமீபத்தில் தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர், கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், மீதமுள்ள 14 தொகுதிகளில் பா.ஜகவும், அ.தி.மு.கவும் போட்டியிடும் என்று அறிவித்து ரங்கசாமியும், பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க, அ.தி.மு.க இடையே தொகுதிப் பங்கீட்டில் கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்து வருவதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் பா.ஜ.க, அ.தி.மு.கவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்குவதாக கூறியிருக்கிறது. ஆனால், கூடுதல் தொகுதிகள் கேட்டு புதுச்சேரி அ.தி.மு.கவினர் அடம் பிடிக்கின்றனர். தமிழக அ.தி.மு.க தலைமையோ பா.ஜ.க கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக் கொள்ளுங்கள் எனச் சொல்கிறதாம். இதனால், புதுச்சேரி அ.தி.மு.கவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
- நிதர்சன் உதயா
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!