DMK Government
தொண்டர்களை மீறி கோவை தெற்கு தாரைவார்ப்பு.. பாஜக அடம்பிடித்த தொகுதிகளை தங்களுக்கு வைத்துக்கொண்ட அ.தி.மு.க!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு நிறைவடைந்து அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அ.தி.மு.கவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பழனி சட்டமன்றத் தொகுதியில் உள்ள கிராமங்களில் பா.ஜ.கவினர், சுவர்களில் தாமரை சின்னத்தை வரைந்து, பழனியில் நாங்கள்தான் போட்டியிடப் போகிறோம் என விளம்பரம் செய்து வந்தனர்.
மேலும், புதுக்கோட்டை தொகுதியையும் பா.ஜ.கவினர் குறிவைத்து பிரச்சாரம் செய்து வந்தனர். புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் பா.ஜ.கவினர் பூத்கமிட்டிகள் அமைத்து வாக்கு சேரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த இரண்டு தொகுதிகளையுமே பா.ஜ.க-வுக்கு ஒதுக்காமல், அ.தி.மு.க வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால், இத்தொகுதிகளைச் சேர்ந்த பா.ஜ.க-வினர் அதிருப்தியடைந்துள்ளனர்.
பா.ஜ.கவுக்கு கோவை தெற்கு தொகுதியைக் கொடுத்தால், கட்சியிலிருந்து கூண்டோடு வெளியேறுவோம் எனக் கூறி இன்று அ.தி.மு.க நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர். ஆனால், கோவை தெற்கு தொகுதியை பா.ஜ.க-வுக்கு தாரைவார்த்துள்ளது அ.தி.மு.க தலைமை.
Also Read
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!
-
ஜானகி vs கேரளா ஸ்டேட்: முடிவுக்கு வந்த பிரச்சினை- தணிக்கை குழுவின் கோரிக்கை ஏற்பு- புதிய படத்தலைப்பு என்ன
-
“மாணவர்கள் கோட்சே வழியில் சென்று விடக்கூடாது” : கல்லூரி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!