Election 2024
#ElectionResultsUpdates : தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி 38 இடங்களில் முன்னிலை!
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துதுவதற்காக 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ’இந்தியா’ கூட்டணியை உருவாக்கி தேர்தளில் களம் கண்டுள்ளனர். இதுவரை இப்படி எதிர்க்கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது கிடையாது. இதனால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதியோடு நிறைவடைந்த தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்நிலையில் தி.மு.க கூட்டணி தமிழ்நாட்டில் 38 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.
தூத்துக்குடியில் தி.மு.க வேட்பாளர் கனிமொழி 41,300 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். காஞ்சிபுரம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் க.செல்வம் 28,410 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
அதேபோல் நீலகிரியில் ஆ.ராசா 31,635 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். சேலம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் செல்வகணபதி 9,349 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.
மேலும் பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் அருண் நேரு 58,096 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் முன்னிலையில் உள்ளார். அதேபோல் திருவள்ளூர் தொகுதியில் சசிகாந்த் செந்தில் 58,800 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
மதுரை மற்றும் திண்டுகல் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர்கள் சு.செங்கடேசன், சச்சிதானந்தம் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். அதேபோல் காங்கிரஸ் 8 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மேலும் 2 தொகுதிகளில் விசிக, 2 தொகுதிகளில் சிபிஐ முன்னிலையில் உள்ளது.
Also Read
-
ரூ.74.70 கோடியில் சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கூடம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
சென்னையின் கலாச்சாரச் சின்னம் : புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“எந்த பாசிச சக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது” : கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“எங்களுக்கு யாரைக் கண்டும் எந்த பயமும் கிடையாது” : கனிமொழி எம்.பி அதிரடி!
-
“திராவிட மாடலின் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!