Election 2024
பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறும் நிதிஷ் குமார்? : பீதியில் மோடி, அமித்ஷா!
மக்களவை தேர்தலில் 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து ’இந்தியா’ கூட்டணியை உருவாக்கி களமாடி வருகின்றன. இக்கூட்டணி உருவாக்கத்திற்கு ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் முக்கிய காரணமாக இருந்தார்.
இந்த ’இந்தியா’ கூட்டணியால் அச்சத்தில் இருந்த பா.ஜ.க நிதிஷ்குமாரை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டால் கூட்டணி சிதைந்து விடும் என கணக்கு போட்டது. அதன்படி நிதிஷ்குமார் பா.ஜ.க கூட்டணியில் இணைந்தார்.
ஆனால் ’இந்தியா’ கூட்டணி சிதையவில்லை. நிதிஷ்குமார் சென்ற பிறகுதான் இன்னும் ’இந்தியா’ கூட்டணி பலமாக வலுவடைந்தது. தற்போது மக்களவை தேர்தலில் இந்தியா முழுவதும் ’இந்தியா’ கூட்டணியின் அலைதான் வீசுகிறது.
மேலும் நிதிஷ்குமார் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தாலும் இக்கூட்டணியில் இருக்கும் மன கசப்பை தனது செயல்பாட்டில் நிதிஷ்குமார் வெளிப்படுத்தி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியுடன் இணைந்து வேண்டா வெறுப்பாகவே நிதிஷ்குமார் பிரச்சாரம் செய்துள்ளார் என்பதை இணையத்தில் வெளிவந்த வீடியோ உறுதிபடுத்தியுள்ளது.
அதேபோல், வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தபோது தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். ஆனால் பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதீஷ் குமார் பங்கேற்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த நிலையில் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிரான தங்களது போராட்டத்துக்கு பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் முழு ஆதரவு உள்ளதாக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி தெரிவித்துள்ளது தேசிய ஜனநாயக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?