Election 2024
நாளை 2 ஆம் கட்ட தேர்தல் : எந்தெந்த மாநிலங்களில் வாக்குப்பதிவு? - முழு விவரம்!
18 ஆவது மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 102 தொகுதிகளில் ஏப்.19 ஆம் தேதி நடைபெற்றது. 21 மாநிலங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 66% வாக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த 2019 தேர்தலைவிட குறைந்த வாக்குப்பதிவாகும்.
இதையடுத்து 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை வெள்ளிக்கிழமை 13 மாநிலங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளில் நடைபெறுகிறது. இம்மாநிலங்களில் நேற்று மாலைதான் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது.
வாக்குப்பதிவுக்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் 13 மாநிலங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7 முதல் முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
2 ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகள் :
அசாம் - 5 (14)
பீகார் - 5 (40)
சத்தீஸ்கர் -3 (11)
கர்நாடகா -14 (28)
கேரளா - 20 (20)
மத்திய பிரதேசம் - 7 (29),
மகாராஷ்டிரா 8 (48),
மணிப்பூர் - 1,
ராஜஸ்தான் - 13 (25)
திரிபுரா 1 (2),
உத்தர பிரதேசம் 8 (80),
மேற்கு வங்கம் 3 (42),
ஜம்மு மற்றும் காஷ்மீர் 1 (5)
ஆகிய 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
Also Read
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“பா.ஜ.க-வின் ஊதுகுழல் அன்புமணி” : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடும் விமர்சனம்!
-
“சனாதனத்தின் வேர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறுத்தெறிவார்” : திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு!
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!