Election 2024
இந்த தொகுதியை தக்கவைக்க முடியுமா? : சீட் கிடைக்காத அதிருப்தியில் பா.ஜ.க லடாக் MP ஆதங்கம்!
7 கட்டமாக நடைபெறும் 18 ஆவது மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் ஏப். 19 ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து நாளை 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில் 5 ஆம் கட்டமாக நடைபெறும் லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரே மக்களவை தொகுதிக்கான வேட்பாளரை பா.ஜ.க அறிவித்துள்ளது.
தற்போது எம்.பியாக இருக்கும் ஜம்யங்க் நம்க்யாலுக்கு பதில், தாஷி கியால்சனின் பெயரை பா.ஜ.க அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் சீட் கிடைக்காத அதிருப்தியில் பா.ஜ.கவில் இருந்து ஜம்யங்க் நம்க்யால் விலகப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ”நான் கட்சியின் சித்தாந்தத்திலிருந்து விலகினேனா?, யாரிடமாவது தவறாக நடந்து கொண்டேனா என்பதை மூத்த தலைவர்களிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தாஷி கியால்சனை வேட்பாளராக நிறுத்தும் பாஜகவின் முடிவை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை.
ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு எனது முடிவை அறிவிப்பேன். பா.ஜ.கவால் இந்த தொகுதியை தக்கவைக்க முடியுமா?" என ஜம்யங்க் நம்க்யால் கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!