Election 2024
இந்த தொகுதியை தக்கவைக்க முடியுமா? : சீட் கிடைக்காத அதிருப்தியில் பா.ஜ.க லடாக் MP ஆதங்கம்!
7 கட்டமாக நடைபெறும் 18 ஆவது மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் ஏப். 19 ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து நாளை 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில் 5 ஆம் கட்டமாக நடைபெறும் லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரே மக்களவை தொகுதிக்கான வேட்பாளரை பா.ஜ.க அறிவித்துள்ளது.
தற்போது எம்.பியாக இருக்கும் ஜம்யங்க் நம்க்யாலுக்கு பதில், தாஷி கியால்சனின் பெயரை பா.ஜ.க அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் சீட் கிடைக்காத அதிருப்தியில் பா.ஜ.கவில் இருந்து ஜம்யங்க் நம்க்யால் விலகப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ”நான் கட்சியின் சித்தாந்தத்திலிருந்து விலகினேனா?, யாரிடமாவது தவறாக நடந்து கொண்டேனா என்பதை மூத்த தலைவர்களிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தாஷி கியால்சனை வேட்பாளராக நிறுத்தும் பாஜகவின் முடிவை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை.
ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு எனது முடிவை அறிவிப்பேன். பா.ஜ.கவால் இந்த தொகுதியை தக்கவைக்க முடியுமா?" என ஜம்யங்க் நம்க்யால் கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !