DMK
“வீரன் சாவதே இல்லை... கோழை வாழ்வதே இல்லை” : முத்தமிழறிஞர் கலைஞரின் பொன்மொழிகள்! #KalaignarQuotes
தமிழ்நாட்டின் தனிப்பெருந்தலைவராக மட்டுமின்றி, இந்தியத் திருநாடே வியந்து போற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
* கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாதென்பதற்காக அல்ல. கோவில் கொடியவரின் கூடாரமாய் இருக்கக் கூடாதென்பதற்காக!
* அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள் ?
* நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியனே... உனக்கு செங்கோல் எதற்கு? மணிமுடி எதற்கு? வெண்கொற்றக் குடை எதற்கு?
* படிச்சவன் பட்டணத்துல போய் உட்கார்ந்துக்கிட்டு எதாச்சும் பதவி போஸ்ட்டுகள தேடிக்கிட்டு தன்னையும் ஒரு உயர்ந்த ஜாதிக்காரன் மாதிரி பாவ்லா பண்ணிக்கிறானே தவிர, அவனால இந்த சமுதாயத்துக்கு ஒரு செல்லாக்காசு பயன் கூட கிடையாது.
* வாழ்க்கையை ஒரு போராட்டம் என வர்ணிப்போர் உளர்!எனக்கோ போராட்டமே வாழ்க்கையாகிவிட்டது.
* எனக்கென்று ஒரு தனி வாழ்க்கை கிடையாது. ஒரு இலட்சியத்தை மையமாகக் கொண்டு சுழலும் இயக்கத்தின் வரலாற்றில் நான் ஒரு பகுதி.
* நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும்!
* இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்!
* வீரன் ஒருமுறைதான் சாவான்; கோழை பலமுறை சாவான் என்பார்கள். ஒரு திருத்தம். வீரன் சாவதே இல்லை. கோழை வாழ்வதே இல்லை.
* ஆதிக்கம் செலுத்துகிற மொழி குயிலாகக் கூவி வந்தாலும்-மயிலாக ஆடி வந்தாலும் மயங்கிடோம். அன்னைத் தமிழ் காப்பதற்கு ஆவி தரவும் தயங்கிடோம்.
* மனச்சாட்சி உறங்கும் போது தானே மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.
* உலகத்திலேயே மலிவானது உபதேசம் ஒன்றுதான். உபதேசிகள் பலர் அதனை மலிவாக விற்றுவிட்டுத் தங்கள் கடையைக் காலியாக வைத்திருப்பார்கள்.
* பெரும்பான்மை, உடலைப் போன்றது.சிறுபான்மை, கண்களைப் போன்றது.உரிமைகள் அனைத்தும் பெரும்பான்மைக்குத்தான் என்று சொல்லி சிறுபான்மையினரைப் புறக்கணிப்பது;கண்களைக் குத்திக் கொள்கிற குருட்டுச் செயலாகும்.
* இசைக்கு மொழி இல்லை: ஆனால் மொழிக்கு இசை தேவை. அதனால்தான் தமிழிசை இயக்கம் தோன்றியது.
* நாம் - ஜனநாயகம்.
நான் - சர்வாதிகாரம்.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”