DMK
“நீதி தவறிய பாண்டியனே.. உனக்கு செங்கோல் எதற்கு?” : முத்தமிழறிஞர் கலைஞரின் பொன்மொழிகள்! #KalaignarQuotes
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டின் தொடக்க நாள் இன்று. முத்தமிழறிஞர் கலைஞரின் பொன்மொழிகள் - சிறப்புத் தொகுப்பாக இங்கே...
* கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாதென்பதற்காக அல்ல. கோவில் கொடியவரின் கூடாரமாய் இருக்கக் கூடாதென்பதற்காக!
* அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள் ?
* நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியனே... உனக்கு செங்கோல் எதற்கு? மணிமுடி எதற்கு? வெண்கொற்றக் குடை எதற்கு?
* படிச்சவன் பட்டணத்துல போய் உட்கார்ந்துக்கிட்டு எதாச்சும் பதவி போஸ்ட்டுகள தேடிக்கிட்டு தன்னையும் ஒரு உயர்ந்த ஜாதிக்காரன் மாதிரி பாவ்லா பண்ணிக்கிறானே தவிர, அவனால இந்த சமுதாயத்துக்கு ஒரு செல்லாக்காசு பயன் கூட கிடையாது.
* வாழ்க்கையை ஒரு போராட்டம் என வர்ணிப்போர் உளர்!எனக்கோ போராட்டமே வாழ்க்கையாகிவிட்டது.
* எனக்கென்று ஒரு தனி வாழ்க்கை கிடையாது. ஒரு இலட்சியத்தை மையமாகக் கொண்டு சுழலும் இயக்கத்தின் வரலாற்றில் நான் ஒரு பகுதி.
* நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும்!
* இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்!
* வீரன் ஒருமுறைதான் சாவான்; கோழை பலமுறை சாவான் என்பார்கள். ஒரு திருத்தம். வீரன் சாவதே இல்லை. கோழை வாழ்வதே இல்லை.
* ஆதிக்கம் செலுத்துகிற மொழி குயிலாகக் கூவி வந்தாலும்-மயிலாக ஆடி வந்தாலும் மயங்கிடோம். அன்னைத் தமிழ் காப்பதற்கு ஆவி தரவும் தயங்கிடோம்.
* மனச்சாட்சி உறங்கும் போது தானே மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.
* உலகத்திலேயே மலிவானது உபதேசம் ஒன்றுதான். உபதேசிகள் பலர் அதனை மலிவாக விற்றுவிட்டுத் தங்கள் கடையைக் காலியாக வைத்திருப்பார்கள்.
* பெரும்பான்மை, உடலைப் போன்றது.சிறுபான்மை, கண்களைப் போன்றது.உரிமைகள் அனைத்தும் பெரும்பான்மைக்குத்தான் என்று சொல்லி சிறுபான்மையினரைப் புறக்கணிப்பது;கண்களைக் குத்திக் கொள்கிற குருட்டுச் செயலாகும்.
* இசைக்கு மொழி இல்லை: ஆனால் மொழிக்கு இசை தேவை. அதனால்தான் தமிழிசை இயக்கம் தோன்றியது.
* நாம் - ஜனநாயகம்.
நான் - சர்வாதிகாரம்.
Also Read
-
கடல் அலையில் சிக்கி உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
"அவ்வளவுதான், மும்பை இந்தியன்ஸ் அணியின் கதை முடிந்து விட்டது" - இர்பான் பதான் கருத்து !
-
"விரைவில் நடராஜன் இந்திய அணியில் இடம்பிடிப்பார்" - SRH பயிற்சியாளர் நம்பிக்கை !
-
நீட் வினாதாள் கசிவு - ”23 லட்சம் மாணவர்களின் கனவுகளை சிதைத்த மோடி அரசு" : ராகுல் காந்தி MP தாக்கு!
-
+2 தேர்வு முடிவுகள் : “குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !