DMK
தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற உரை தொகுப்பு நூல் வெளியீடு!
தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது.
தி.மு.க மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் தி.மு.கழகத்தின் மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி வரவேற்புரையாற்றிப் பேசினார்.
பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற உரைகள் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற உரைகள் தொகுப்பு நூலை தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட, தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
Also Read
-
பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரம் : பிரதமர் மோடி வாய் திறப்பாரா? - பிரியங்கா காந்தி கேள்வி!
-
"இனி என்னிடம் ஆலோசனை கேட்காதே" - ருத்துராஜிடம் கூறிய தோனி... பத்தினாத் வெளியிட்ட தகவல் !
-
விசிக வழங்கும் விருதுகள் பட்டியல் அறிவிப்பு : நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு அம்பேத்கர் சுடர் விருது !
-
73 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் : ஊட்டிக்கே இந்த நிலையா ? - கொதிக்கும் கோடை வெப்பம் !
-
பள்ளத்தில் கவிழ்ந்த கார் : இரவில் கணவன், மனைவிக்கு நேர்ந்த சோகம்!