DMK
தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற உரை தொகுப்பு நூல் வெளியீடு!
தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது.
தி.மு.க மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் தி.மு.கழகத்தின் மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி வரவேற்புரையாற்றிப் பேசினார்.
பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற உரைகள் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற உரைகள் தொகுப்பு நூலை தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட, தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!