DMK
தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற உரை தொகுப்பு நூல் வெளியீடு!
தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது.
தி.மு.க மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் தி.மு.கழகத்தின் மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி வரவேற்புரையாற்றிப் பேசினார்.
பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற உரைகள் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற உரைகள் தொகுப்பு நூலை தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட, தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
Also Read
-
மகளிர் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க 23 மாவட்டங்களில் “திறனகம்” : 5 முக்கிய அம்சங்கள் என்ன?
-
ஒன்றிய - மாநில உறவு : தமிழ்நாட்டின் குரலுக்கு ஆதரவு தந்த CM சித்தராமையா - நன்றி சொன்ன CM MK Stalin!
-
தென் இந்தியாவிலேயே முதன் முறை... சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உயர்திறன் மையம்!
-
இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு : துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
இந்திய அளவிலான சிறப்பு கட்டமைப்புகளை பெற்று வரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை: அமைச்சர் மா.சு. பெருமிதம்!