DMK
தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற உரை தொகுப்பு நூல் வெளியீடு!
தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது.
தி.மு.க மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் தி.மு.கழகத்தின் மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி வரவேற்புரையாற்றிப் பேசினார்.
பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற உரைகள் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற உரைகள் தொகுப்பு நூலை தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட, தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!