DMK

மழை வெள்ளப் பாதிப்பு.. சோர்வின்றி களத்தில் நின்று பணிகளை முடுக்கிவிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! #album

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.11.2021) கனமழையால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி, பத்மாவதி நகர் மற்றும் ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து, தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார்கள்.

உடன் பால்வளத் துறை அமைச்சர்சா.மு.நாசர், நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கே.ஜெயக்குமார், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் இரா.ஆனந்தகுமார், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப., உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.