DMK
நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ சுற்றுப்பயண தேதி மாற்றம்-தி.மு.க அறிவிப்பு!
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ 6-ம் கட்ட பிரச்சார பயணம் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தி.மு.க தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இதுவரை பல்வேறு மாவட்டங்களில் ஐந்து கட்டங்களாக ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். 6-ம் கட்ட பிரச்சாரத்தை, மார்ச் 8, 9 ஆகிய தேதிகளில் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 6ஆம் கட்ட சுற்றுப் பயணத் தேதி மாற்றப்பட்டுள்ளது. மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் 6-ம் கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்வார் என தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
மேலும், தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் என தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளர்.
தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (5-3-2021, வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.
நாளை நடைபெறும் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மார்ச் 7-ல் திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டம் குறித்து ஆலோசிக்கப்படும்.
அப்போது மாவட்டக் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே!” : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
“இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்லும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்!” : சரவணன் அண்ணாதுரை விமர்சனம்!
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!
-
நீட் மோசடி.. NTA அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு ? - உச்ச நீதிமன்றத்தில் பகீர் கிளப்பு புதிய மனு!