DMK
பேரறிஞர் நினைவுநாள்: காஞ்சியில் தி.மு.கவினர் அமைதி பேரணி.. உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு! (ALBUM)
பேரறிஞர் அண்ணாவின் 52 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் காஞ்சிபுரத்தில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் க.சுந்தர் முன்னிலையில் காஞ்சிபுரம் காந்தி ரோடு பெரியார் தூணிலிருந்து அமைதிப் பேரணியாக புறப்பட்டு காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தை அடைந்தது. இந்தப் பேரணியில் திரளானோர் பங்கேற்றனர். பின்னர் அங்குள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்தப் பேரணியில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், ஆர்.டி.அரசு, எஸ்.புகழேந்தி, மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல், மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன், காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து, விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பிரசாரத்தின் 4 வது கட்ட பயணத்தை காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தில் இருந்து தொடங்கினார். பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் அண்ணா வாழ்க்கை வரலாறு புகைப்படங்களை பார்வையிட்டார். முன்னதாக அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள பதிவேட்டில் உதயநிதி ஸ்டாலின் தனது கையொப்பம் இட்டார்.
Also Read
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!
-
“தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி!” : முதலீடுகளை ஈர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
தொடர்ந்து 4 நாட்களாக சசிகாந்த் உண்ணாவிரத போராட்டம்.. முதலமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க போராட்டம் முடிவு!
-
"நயினார் நாகேந்திரன் தேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக்கொள்கிறார்" - அமைச்சர் TRB ராஜா பதிலடி !