DMK
பேரறிஞர் நினைவுநாள்: காஞ்சியில் தி.மு.கவினர் அமைதி பேரணி.. உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு! (ALBUM)
பேரறிஞர் அண்ணாவின் 52 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் காஞ்சிபுரத்தில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் க.சுந்தர் முன்னிலையில் காஞ்சிபுரம் காந்தி ரோடு பெரியார் தூணிலிருந்து அமைதிப் பேரணியாக புறப்பட்டு காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தை அடைந்தது. இந்தப் பேரணியில் திரளானோர் பங்கேற்றனர். பின்னர் அங்குள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்தப் பேரணியில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், ஆர்.டி.அரசு, எஸ்.புகழேந்தி, மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல், மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன், காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து, விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பிரசாரத்தின் 4 வது கட்ட பயணத்தை காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தில் இருந்து தொடங்கினார். பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் அண்ணா வாழ்க்கை வரலாறு புகைப்படங்களை பார்வையிட்டார். முன்னதாக அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள பதிவேட்டில் உதயநிதி ஸ்டாலின் தனது கையொப்பம் இட்டார்.
Also Read
-
பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் அட்டகாசம் : பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் த.வெ.க-வினர்!
-
”இயற்கையின் ரகசியம்.. நீலகிரியில் அரிய வகை பறக்காத ஈ கண்டுபிடிப்பு.. ஆச்சரியத்தில் ஆழ்ந்த மக்கள்!”
-
அடுத்தடுத்து வெளிவரும் த.வெ.க நிர்வாகிகளின் மோசடி : ரூ.15 கோடி ஏமாற்றம்!
-
”தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடம்.. ஆளுநரின் அஜெண்டாவிற்கு தலையாட்டிய விஜய்” : முரசொலி விமர்சனம்!
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!