DMK

“எஜமானர் கால்களை கும்பிட்டு ஆட்சி நடத்தும் அடிமைகளை அகற்றுவோம்” : உதயநிதி ஸ்டாலின் (Album)

திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி - சிற்பங்களுக்கு புகழ் பெற்ற நாகலாபுரத்தில் உள்ள சிற்பி நாகலாபுரம் நடராஜன் நினைவிடத்துக்கு சென்று தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர், முத்தையாம்பாளையம் பகுதியில், தி.மு.க இளைஞரணியினர் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “மக்களை சந்திக்காமல் எஜமானர் கால்களை கும்பிட்டு ஆட்சி நடத்தும் அடிமைகளை அகற்றுவோம்” என்றார்.

திருச்சி(வ) மாவட்டம் துறையூர் தொகுதி நாகலாபுரத்தில் ஒன்றிய அவைத்தலைவராக பணியாற்றி அண்மையில் மறைந்த துரைராஜ் அவர்களின் இல்லத்துக்கு நேரில் சென்ற தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவரின் திருவுருவப்படத்துக்கு மரியாதை செய்தார்.