DMK

கடலூரில் உதயநிதி ஸ்டாலின்.. அதிமுக ஆட்சியின் இறுதி அத்தியாயத்தை உறுதிபடுத்திய மக்களின் வரவேற்பு! (ALBUM)

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தனது இரண்டாம் கட்ட பரப்புரையை கடலூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கினார் தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்பளித்தனர்.

அவர்களின் வரவேற்பு 10 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி நடத்தி மாநில உரிமைகளை பறிகொடுத்த அதிமுகவின் இறுதி அத்தியாத்தை உறுதிபடுத்தியுள்ளது.

Also Read: "2021ல் தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டுமென மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!