DMK
“தமிழக மீனவர்களின் நலனை பாதுகாத்திடுங்கள்” - சர்வதேச மீனவர் தினத்தில் அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
சர்வதேச மீனவர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழக மீனவர்களின் நலனை பாதுகாத்து அவர்களும், அவர்களின் படகுகளும் அந்நிய இராணுவத்தின் எவ்வித தாக்குதலுக்கும் உள்ளாகாமல் பாதுகாத்திட மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியின் விவரம் பின்வருமாறு:
“சர்வதேச மீனவர் தினமான இன்று தமிழக மீனவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீன்பிடித் தொழிலையும், மீனவர்கள் நலனையும், அவர்களின் வாழ்வான மீன்வளத்தையும் போற்றும் இந்த தினத்தில் மீனவர்கள் அனைத்து வளமும் - வேலைவாய்ப்பும் பெற்று மீன்பிடித் தொழிலில் மென்மேலும் செழிக்க வேண்டும்.
மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களின் நலனை பாதுகாத்து அவர்களும், அவர்களின் படகுகளும் அந்நிய இராணுவத்தின் எவ்வித தாக்குதலுக்கும், சேதத்திற்கும் உள்ளாகாமல் பாதுகாத்திட மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சர்வதேச மீனவர் தினமான இன்று வேண்டுகோள் விடுக்கிறேன்.”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Also Read
-
இந்த 3 நாட்கள் ஊட்டிக்கு செல்ல வேண்டாம் : சுற்றுலா பயணிகளுக்கான முக்கிய தகவல் இதோ!
-
சூரிய காந்தப் புயல்களின் தரவுகளை சேகரித்த ஆதித்யா விண்கலம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியது என்ன ?
-
இனி அனுமதி இன்றி யாரையும் கைது செய்ய முடியாது : அமலாக்கத்துறைக்கு கட்டுப்பாடு விதித்த உச்சநீதிமன்றம் !
-
இது வெறும் டிரெய்லர்தான்... இந்தியா கூட்டணியின் முதல் வெற்றி - ஒன்றிய அரசை கதி கலங்க வைத்த கபில் சிபல் !
-
இஸ்லாமியர் என்ற வார்த்தையை பயன்படுத்த தடை : சர்ச்சையில் தூர்தர்ஷன் தொலைக்காச்சி : CPIM விமர்சனம் !