DMK
“தமிழக மீனவர்களின் நலனை பாதுகாத்திடுங்கள்” - சர்வதேச மீனவர் தினத்தில் அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
சர்வதேச மீனவர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழக மீனவர்களின் நலனை பாதுகாத்து அவர்களும், அவர்களின் படகுகளும் அந்நிய இராணுவத்தின் எவ்வித தாக்குதலுக்கும் உள்ளாகாமல் பாதுகாத்திட மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியின் விவரம் பின்வருமாறு:
“சர்வதேச மீனவர் தினமான இன்று தமிழக மீனவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீன்பிடித் தொழிலையும், மீனவர்கள் நலனையும், அவர்களின் வாழ்வான மீன்வளத்தையும் போற்றும் இந்த தினத்தில் மீனவர்கள் அனைத்து வளமும் - வேலைவாய்ப்பும் பெற்று மீன்பிடித் தொழிலில் மென்மேலும் செழிக்க வேண்டும்.
மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களின் நலனை பாதுகாத்து அவர்களும், அவர்களின் படகுகளும் அந்நிய இராணுவத்தின் எவ்வித தாக்குதலுக்கும், சேதத்திற்கும் உள்ளாகாமல் பாதுகாத்திட மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சர்வதேச மீனவர் தினமான இன்று வேண்டுகோள் விடுக்கிறேன்.”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Also Read
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!
-
5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள்…அனைத்து தரப்பினருக்குமானது திராவிட மாடல் ஆட்சி: துணை முதலமைச்சர் பேச்சு!
-
சாலைப் பயணத்திற்கு இனி கவலை இல்லை… ரூ.1,843.85 கோடி செலவில் 11 சாலைகள்: திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
ரூ.211.90 கோடியில் 45 முடிவுற்ற, ரூ.53.76 கோடியில் 9 புதிய திட்டப் பணிகள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!