DMK
தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளர், பொருளாளர் யார்? : மார்ச் 29ம் தேதி தேர்வு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தி.மு.க பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு மார்ச் 29ம் தேதி நடைபெறவிருக்கிறது.
தி.மு.க-வின் பொதுச் செயலாளராக கடந்த 43 ஆண்டுகளாகப் பொறுப்பு வகித்து வந்த இனமானப் பேராசிரியர் உடல்நலக்குறைவால் கடந்த மார்ச் 7ஆம் தேதி காலமானார்.
இதையடுத்து, தி.மு.கவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் பரவலாக எழுந்துள்ள நிலையில், தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் வருகிற 29ஆம் தேதி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “தி.மு.க பொதுக்குழு கூட்டம் வருகிற 29ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் எனது தலைமையில் நடைபெறும். அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தி.மு.க பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு தற்போதைய தி.மு.க பொருளாளர் துரைமுருகன் போட்டியிட விரும்புவதால், பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளதை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், “மார்ச் 29 அன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்புகளுக்கான தேர்வு நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!