DMK
உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்தினாலும் எதிர்கொள்ள தி.மு.க தயார் - துரைமுருகன் பேட்டி!
தி.மு.க பொருளாளர் துரைமுருகன் சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''மொழி வழி மாநிலம் பிரிக்கப்பட்டதைவிட தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட நாளைத் தான் தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும்.
டெங்குவால் உயிரிழப்புகள் தொடர்ந்து வருகிறது. கிராமங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. இதுவரை டெங்குவால் எத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதை கூட அரசு வெளிப்படையாக சொல்ல தயாராக இல்லை.
புதிய கல்வி கொள்கை நாட்டுக்கு ஆபத்து. இது குறித்து சட்டமன்றத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் அல்லது பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும். ஆனால் தமிழக அரசு எதுவும் செய்யவில்லை. தேசிய கல்வி கொள்கை குறித்து யாருடனும் விவாதிக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக இல்லை.
உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தி.மு.க தயாராக உள்ளது. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றியினால் உள்ளாட்சி தேர்தல் அ.தி.மு.க வெற்றி பெறாது'' எனத் தெரிவித்தார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!