DMK
உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்தினாலும் எதிர்கொள்ள தி.மு.க தயார் - துரைமுருகன் பேட்டி!
தி.மு.க பொருளாளர் துரைமுருகன் சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''மொழி வழி மாநிலம் பிரிக்கப்பட்டதைவிட தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட நாளைத் தான் தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும்.
டெங்குவால் உயிரிழப்புகள் தொடர்ந்து வருகிறது. கிராமங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. இதுவரை டெங்குவால் எத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதை கூட அரசு வெளிப்படையாக சொல்ல தயாராக இல்லை.
புதிய கல்வி கொள்கை நாட்டுக்கு ஆபத்து. இது குறித்து சட்டமன்றத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் அல்லது பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும். ஆனால் தமிழக அரசு எதுவும் செய்யவில்லை. தேசிய கல்வி கொள்கை குறித்து யாருடனும் விவாதிக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக இல்லை.
உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தி.மு.க தயாராக உள்ளது. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றியினால் உள்ளாட்சி தேர்தல் அ.தி.மு.க வெற்றி பெறாது'' எனத் தெரிவித்தார்.
Also Read
-
“கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பெரம்பூரில் ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
கொளத்தூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! - 6 நியாய விலைக்கடைகள், மறுவாழ்வு மையம் தொடக்கம்!
-
தமிழ்த்தாயின் தலைமகன் : பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் : காப்பீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சர் MRK உத்தரவு!