DMK
உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்தினாலும் எதிர்கொள்ள தி.மு.க தயார் - துரைமுருகன் பேட்டி!
தி.மு.க பொருளாளர் துரைமுருகன் சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''மொழி வழி மாநிலம் பிரிக்கப்பட்டதைவிட தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட நாளைத் தான் தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும்.
டெங்குவால் உயிரிழப்புகள் தொடர்ந்து வருகிறது. கிராமங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. இதுவரை டெங்குவால் எத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதை கூட அரசு வெளிப்படையாக சொல்ல தயாராக இல்லை.
புதிய கல்வி கொள்கை நாட்டுக்கு ஆபத்து. இது குறித்து சட்டமன்றத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் அல்லது பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும். ஆனால் தமிழக அரசு எதுவும் செய்யவில்லை. தேசிய கல்வி கொள்கை குறித்து யாருடனும் விவாதிக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக இல்லை.
உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தி.மு.க தயாராக உள்ளது. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றியினால் உள்ளாட்சி தேர்தல் அ.தி.மு.க வெற்றி பெறாது'' எனத் தெரிவித்தார்.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!