DMK
“வாக்குச்சாவடிகளை கைப்பற்றத் திட்டமிடும் அ.தி.மு.கவினர்” - தலைமை தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க மனு!
தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெற அ.தி.மு.க பல்வேறு குறுக்கு வழிகளை கையாண்டு வருகிறது.
இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி தி.மு.க, தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளது.
அந்த மனுவில், நாங்குநேரி , விக்கிரவாண்டியில் இடைத்தேர்தலில் அதிக பாதுகாப்பு அளிக்கவேண்டும். பதற்றமான இடங்களில் மேலும் பாதுகாப்பினை உறுதி செய்யவேண்டும். வாக்கு எண்ணிக்கையை நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும்.
அ.தி.மு.க-வினர் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதால் கூடுதலாக கண்காணிக்க வேண்டும். மேலும் பத்திரிகையாளர்களும் அதனை கண்காணிக்க உரிய வகையில் அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் தி.மு.க சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், விக்கிரவாண்டி பகுதியில் வாக்குச்சாவடிகளை அ.தி.மு.க கைப்பற்ற உள்ளதாகவும், வன்முறைக்கு வாய்ப்புள்ள வாக்குச்சாவடிகளை கணக்கெடுத்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
நாங்குநேரி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அ.தி.மு.க.வினர் பணம் விநியோகம் செய்வதை மறைப்பதற்காக தி.மு.க மீது வீண் பழி சுமத்துகிறார்கள் எனப் பதிலளித்தார்.
Also Read
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!