DMK
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: மு.க.ஸ்டாலினின் பிரசார திட்டம் அறிவிப்பு!
தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் அக்.,21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தி.மு.க சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் புகழேந்தி போட்டியிடுகிறார்.
நாங்குநேரி தொகுதிக்கான வேட்பாளரை இன்று காங்கிரஸ் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இரண்டு தொகுதிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள விவரங்களை தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
அதில், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் இரண்டு கட்டங்களாக 10 நாட்கள் பரபரப்புரையில் மு.க.ஸ்டாலின் ஈடுபடவுள்ளார்.
விக்கிரவாண்டியில் அக்., 3 மற்றும் 4ம் தேதி முதல்கட்டமாகவும், 12,13,14 ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்டமாகவும் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளார்.
அதேபோல், நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அக்., 5 மற்றும் 6ம் தேதி முதல்கட்டமாகவும், 17,18,19 ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்டமாகவும் பரப்புரையில் ஈடுபடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!