DMK
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: மு.க.ஸ்டாலினின் பிரசார திட்டம் அறிவிப்பு!
தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் அக்.,21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தி.மு.க சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் புகழேந்தி போட்டியிடுகிறார்.
நாங்குநேரி தொகுதிக்கான வேட்பாளரை இன்று காங்கிரஸ் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இரண்டு தொகுதிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள விவரங்களை தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
அதில், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் இரண்டு கட்டங்களாக 10 நாட்கள் பரபரப்புரையில் மு.க.ஸ்டாலின் ஈடுபடவுள்ளார்.
விக்கிரவாண்டியில் அக்., 3 மற்றும் 4ம் தேதி முதல்கட்டமாகவும், 12,13,14 ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்டமாகவும் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளார்.
அதேபோல், நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அக்., 5 மற்றும் 6ம் தேதி முதல்கட்டமாகவும், 17,18,19 ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்டமாகவும் பரப்புரையில் ஈடுபடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”பின்வாங்கிய தவெக அரசு.. அரசுப்பணியில் ராதன் பண்டிட்.. சட்டமன்றம் வரை எதிரொலித்த கடும் எதிர்ப்பு!”
-
“இந்த Change-க்கு பின்னால் பெரிய Exchange இருக்கிறதோ?” : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
“Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்த தவெகவின் Dirty Politics” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
”நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் 7 சாபங்கள்.. பொருளாதார அவசர நிலையா?” - முரசொலி தலையங்கம் கேள்வி!
-
அதிகாலையில் நடந்த கொடூரம் : லாரி மீது கார் மோதி காவலர் உட்பட 6 பேர் பலி!