DMK
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: மு.க.ஸ்டாலினின் பிரசார திட்டம் அறிவிப்பு!
தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் அக்.,21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தி.மு.க சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் புகழேந்தி போட்டியிடுகிறார்.
நாங்குநேரி தொகுதிக்கான வேட்பாளரை இன்று காங்கிரஸ் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இரண்டு தொகுதிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள விவரங்களை தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
அதில், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் இரண்டு கட்டங்களாக 10 நாட்கள் பரபரப்புரையில் மு.க.ஸ்டாலின் ஈடுபடவுள்ளார்.
விக்கிரவாண்டியில் அக்., 3 மற்றும் 4ம் தேதி முதல்கட்டமாகவும், 12,13,14 ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்டமாகவும் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளார்.
அதேபோல், நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அக்., 5 மற்றும் 6ம் தேதி முதல்கட்டமாகவும், 17,18,19 ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்டமாகவும் பரப்புரையில் ஈடுபடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
திமுக தலைவராக பொறுப்பேற்று 8-ஆம் ஆண்டு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் பயணம் இதோ!
-
திமுக ஆட்சியை பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய அரசே தந்துள்ள நெத்தியடி பதில் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
”ஜவுளி தொழிலை பாதுகாக்க வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
-
”திராவிட மாடல் ஆட்சியில் சிறப்பாக நடத்தப்படும் குடமுழுக்கு விழாக்கள்” : அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!
-
”நம் கரங்களை வலுப்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : தேஜஸ்வி யாதவ் பேச்சு!