DMK
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: மு.க.ஸ்டாலினின் பிரசார திட்டம் அறிவிப்பு!
தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் அக்.,21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தி.மு.க சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் புகழேந்தி போட்டியிடுகிறார்.
நாங்குநேரி தொகுதிக்கான வேட்பாளரை இன்று காங்கிரஸ் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இரண்டு தொகுதிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள விவரங்களை தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
அதில், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் இரண்டு கட்டங்களாக 10 நாட்கள் பரபரப்புரையில் மு.க.ஸ்டாலின் ஈடுபடவுள்ளார்.
விக்கிரவாண்டியில் அக்., 3 மற்றும் 4ம் தேதி முதல்கட்டமாகவும், 12,13,14 ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்டமாகவும் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளார்.
அதேபோல், நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அக்., 5 மற்றும் 6ம் தேதி முதல்கட்டமாகவும், 17,18,19 ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்டமாகவும் பரப்புரையில் ஈடுபடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 : வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!