DMK
இந்தியை எந்த வகையில் திணிக்க முயற்சித்தாலும் தி.மு.க இளைஞர் அணி எதிர்த்து போராடும் - உதயநிதி ஸ்டாலின்
கரூர் மாவட்டம் தந்தோணி ஒன்றியம், ஜெகதாபி ஊராட்சி, முத்தக்காப்பட்டி வேலாயுதம் பாளையத்தில் தி.மு.க இளைஞர் அணியினரால் தூர்வாரப்பட்ட குளத்தை தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''இளைஞர் அணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திபடி தி.மு.க இளைஞர் அணியினரால் இந்த குளம் தூர்வாரப்பட்டுள்ளது. இந்த பணிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து இதுபோன்ற பொது மக்களுக்கு பயனுள்ள பணிகளில் தி.மு.க இளைஞர் அணியினர் ஈடுபடுவார்கள்.
நாளை தி.மு.க அறிவித்திருந்த போராட்டம், அமித்ஷா தன் கருத்தில் இருந்து பின்வாங்கியது மற்றும் தி.மு.க தலைவரை ஆளுநர் அழைத்து பேசியதால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி. போராட்டம் தற்காலிகமாக தான் நிறுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியை எந்த வகையில் திணிக்க முயசித்தலும் தி.மு.க தலைமையின் ஆணை படி தி.மு.க இளைஞர் அணி போராடும்'' எனத் தெரிவித்தார்.
Also Read
-
”தமிழ்நாட்டை உலகின் விளையாட்டு மையமாக மாற்றி வருகிறோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் ஜப்பான் தரத்துக்கு இணையானது” : டி.ஆர்.பி ராஜா பெருமிதம்!
-
தமிழ்நாட்டு வீரர் அ.மஹாராஜனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
Dominant செய்யும் திவ்யாவை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்: Hotel டாஸ்கால் ஆஹா ஓஹோ என மாறிய BB வீடு!
-
“திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!