DMK
இந்தியை எந்த வகையில் திணிக்க முயற்சித்தாலும் தி.மு.க இளைஞர் அணி எதிர்த்து போராடும் - உதயநிதி ஸ்டாலின்
கரூர் மாவட்டம் தந்தோணி ஒன்றியம், ஜெகதாபி ஊராட்சி, முத்தக்காப்பட்டி வேலாயுதம் பாளையத்தில் தி.மு.க இளைஞர் அணியினரால் தூர்வாரப்பட்ட குளத்தை தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''இளைஞர் அணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திபடி தி.மு.க இளைஞர் அணியினரால் இந்த குளம் தூர்வாரப்பட்டுள்ளது. இந்த பணிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து இதுபோன்ற பொது மக்களுக்கு பயனுள்ள பணிகளில் தி.மு.க இளைஞர் அணியினர் ஈடுபடுவார்கள்.
நாளை தி.மு.க அறிவித்திருந்த போராட்டம், அமித்ஷா தன் கருத்தில் இருந்து பின்வாங்கியது மற்றும் தி.மு.க தலைவரை ஆளுநர் அழைத்து பேசியதால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி. போராட்டம் தற்காலிகமாக தான் நிறுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியை எந்த வகையில் திணிக்க முயசித்தலும் தி.மு.க தலைமையின் ஆணை படி தி.மு.க இளைஞர் அணி போராடும்'' எனத் தெரிவித்தார்.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!