DMK
இந்தியை எந்த வகையில் திணிக்க முயற்சித்தாலும் தி.மு.க இளைஞர் அணி எதிர்த்து போராடும் - உதயநிதி ஸ்டாலின்
கரூர் மாவட்டம் தந்தோணி ஒன்றியம், ஜெகதாபி ஊராட்சி, முத்தக்காப்பட்டி வேலாயுதம் பாளையத்தில் தி.மு.க இளைஞர் அணியினரால் தூர்வாரப்பட்ட குளத்தை தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''இளைஞர் அணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திபடி தி.மு.க இளைஞர் அணியினரால் இந்த குளம் தூர்வாரப்பட்டுள்ளது. இந்த பணிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து இதுபோன்ற பொது மக்களுக்கு பயனுள்ள பணிகளில் தி.மு.க இளைஞர் அணியினர் ஈடுபடுவார்கள்.
நாளை தி.மு.க அறிவித்திருந்த போராட்டம், அமித்ஷா தன் கருத்தில் இருந்து பின்வாங்கியது மற்றும் தி.மு.க தலைவரை ஆளுநர் அழைத்து பேசியதால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி. போராட்டம் தற்காலிகமாக தான் நிறுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியை எந்த வகையில் திணிக்க முயசித்தலும் தி.மு.க தலைமையின் ஆணை படி தி.மு.க இளைஞர் அணி போராடும்'' எனத் தெரிவித்தார்.
Also Read
-
சமூகநீதித் தேரைப் பின்னுக்குத் தள்ளுவதா? : விஜய்க்கு தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேள்வி!
-
“தமிழோடு விளையாடியவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை” : தமிழ்த்தாய் வாழ்த்து அவமரியாதை - திமுக கண்டனம்
-
ராமநாதபுரத்தில் பரபரப்பு : ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் கையும் களவுமாகக் கைது!
-
”CSK நிர்வாகத்திற்கும் தோனிக்கும் பிரச்சனையா.. அஸ்வின் கிளப்பிய புதிய புயல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!”
-
ஓடி ஒளியாதீர்கள் CM Sir : மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - கனிமொழி என்.வி.என்.சோமு கண்டனம்!