DMK
உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் : டி.ஆர்.பாலு கோரிக்கை !
உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வெளியாகும் வழக்கின் தீர்ப்புகள் இனி ஆங்கிலம் மட்டும் இல்லாமல் பிராந்திய மொழிகளிலும் வெளியாகும் என ஜூலை 3ம் தேதி அறிவிக்கப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகள் இருக்கும் அந்தப் பட்டியலில் தமிழ் மொழி இல்லாதது வருத்தத்துக்குரியதாக அமைந்தது.
தமிழ் மொழியையும் அப்பட்டியலில் சேர்க்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழிலும் வெளியிடவேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் திமுக கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலு, தலைமை நீதிபதியை டெல்லியில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார். தி.மு.க.வின் கோரிக்கையை பரிசீலித்து தமிழிலும் வெளியிட நடவடிக்கை எடுப்பதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உறுதியளித்துள்ளதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!