DMK
உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் : டி.ஆர்.பாலு கோரிக்கை !
உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வெளியாகும் வழக்கின் தீர்ப்புகள் இனி ஆங்கிலம் மட்டும் இல்லாமல் பிராந்திய மொழிகளிலும் வெளியாகும் என ஜூலை 3ம் தேதி அறிவிக்கப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகள் இருக்கும் அந்தப் பட்டியலில் தமிழ் மொழி இல்லாதது வருத்தத்துக்குரியதாக அமைந்தது.
தமிழ் மொழியையும் அப்பட்டியலில் சேர்க்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழிலும் வெளியிடவேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் திமுக கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலு, தலைமை நீதிபதியை டெல்லியில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார். தி.மு.க.வின் கோரிக்கையை பரிசீலித்து தமிழிலும் வெளியிட நடவடிக்கை எடுப்பதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உறுதியளித்துள்ளதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
Also Read
-
”தோனி ஏன் மைதானத்திற்கு வருவதில்லை.. பயிற்சியாளர் மைக்கல் ஹசி சொன்ன காரணம்” : முழு விவரம் அறிக!
-
குமார ராணி முனைவர் மீனா முத்தையா மறைவு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
ஏப்ரல் மாதத்தில் 90.18 லட்சம் பயணிகள் பயணம் : ஒரே நாளில் இவ்வளவு பேரா?- மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்!
-
”கொத்தடிமை ஒழிப்பு நடவடிக்கை.. இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு”! - முழு விவரம்!
-
“LPG விலையை ஏற்றுவது சரியல்ல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!