DMK
கஜா புயல் நிவாரணம் என்ன ஆனது? : தி.மு.க சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம்!
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் ஐந்தாவது நாளான இன்று மின்சாரம், மதுவிலக்கு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழிலும் வெளியிடவேண்டும் என தசிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.
தொடர்ந்து, தி.மு.க எம்.எல்.ஏ மதிவாணன் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய நிவாரணம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப்போட்டது கஜா புயல். கஜா புயல் நிவாரணப் பணிகளில் மிகவும் மெத்தனமாகச் செயல்பட்டது எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அரசு.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எட்டு மாதங்களாகியும் இன்னும் வீடுகள் கட்டித்தரப்படவில்லை. வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்கவேண்டும் என தி.மு.க எம்.எல்.ஏ மதிவாணன் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து பேசினார்.
மின்சாரத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி பேசும்போது அ.தி.மு.க-வினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!