DMK
கஜா புயல் நிவாரணம் என்ன ஆனது? : தி.மு.க சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம்!
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் ஐந்தாவது நாளான இன்று மின்சாரம், மதுவிலக்கு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழிலும் வெளியிடவேண்டும் என தசிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.
தொடர்ந்து, தி.மு.க எம்.எல்.ஏ மதிவாணன் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய நிவாரணம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப்போட்டது கஜா புயல். கஜா புயல் நிவாரணப் பணிகளில் மிகவும் மெத்தனமாகச் செயல்பட்டது எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அரசு.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எட்டு மாதங்களாகியும் இன்னும் வீடுகள் கட்டித்தரப்படவில்லை. வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்கவேண்டும் என தி.மு.க எம்.எல்.ஏ மதிவாணன் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து பேசினார்.
மின்சாரத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி பேசும்போது அ.தி.மு.க-வினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!
-
“18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SDPI-க்கு வாழ்த்துகள்!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!
-
“CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்.. சட்டம் தெரியுமா? தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூறும் பொய்!”
-
உணவுக்குப் பதில் பிஸ்கட் : காலை உணவு திட்டத்தில் அலட்சியம் காட்டும் த.வெ.க அரசு!