DMK
தண்ணீர் பஞ்சத்தை போக்காத அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் போராட்டம்!
தமிழகம் முழுவதும் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்காத எடப்பாடி அரசைக் கண்டித்தும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதேப்போல், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ஜெ.அன்பழகன் சார்பில், தண்ணீர் பஞ்சத்தை போக்காத அ.தி.மு.க அரசுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தி.மு.க. தொண்டர்களுடன் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கலந்துகொண்டு எடப்பாடி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக துணைப்பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், மத்திய சென்னை எம்.பி. தயாநிதிமாறன், தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வம், மோகன், மற்றும் முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Also Read
-
மெட்ரோ விவகாரம் : பதிலே இல்லாமல் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர்.. - சு.வெ எம்.பி. விமர்சனம்!
-
“முத்தமிழறிஞர் கலைஞருக்கு ’பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்” - தமிழச்சி தங்கப்பாண்டியன் MP வலியுறுத்தல்!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!